பாராட்டத்தக்க செய்தி தொகுப்பு மோடி 'திடீர்' பாகிஸ்தான் பயணம்:...
பாராட்டத்தக்க செய்தி தொகுப்பு
மோடி 'திடீர்' பாகிஸ்தான் பயணம்:
நவாஸ் உடன் மோடி சந்திப்பு

பாகிஸ்தானுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் மோடியை லாகூர் விமான நிலையத்தில் வரவேற்றார் அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப். | படங்கள்: பிடிஐட்விட்டரில் அறிவிப்பு... பாக். பிரதமர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பு...நவாஸ் உடன் பேச்சுபாகிஸ்தானுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, லாகூரில் அந்நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து பேச்சு நடத்தினார்.ஆப்கானிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு, தலைநகர் காபூலில் இருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்ட பிரதமர் மோடி வழியில் பாகிஸ்தானில் வெள்ளிக்கிழமை லாகூர் சென்றார்.லாகூர் விமான நிலையத்தில் காத்திருந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், மோடியின் கரங்களைப் பிடித்து புன்னகையுடன் வரவேற்றார். அதன் பின்னர், நவாஸ் இல்லத்தில் இரு தலைவர்களும் சந்தித்துப் பேசினர்.இதனிடையே, இந்தியப் பிரதமர் மோடியின் திடீர் வருகையையொட்டி, பாகிஸ்தான் தரப்பு பாதுகாப்பைப் பலப்படுத்தியிருந்தது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் இன்று பிறந்தநாள் வாழ்த்துகள் கூறினார்.
இரு தலைவர்களும் நவாஸ் இல்லத்துக்கு தனி ஹெலிகாப்டர் மூலம் சென்றனர்.
நவாஸ் இல்லத்தில் நடந்த அவரது பேத்தியின் திருமண நிகழ்ச்சியில், இந்தியப் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் இரு நாட்டு உறவு குறித்து பேச்சு நடத்தினர்.
மணமக்களை வாழ்த்திய பிறகு, நவாஸ் இல்லத்தில் இருந்து லாகூர் விமான நிலையம் புறப்பட்டார் மோடி.
தனது சில மணி நேர பாகிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு, லாகூர் விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்டார் மோடி.*ட்விட்டரில் மோடி திடீர் அறிவிப்புஆப்கானிஸ்தான் பயணித்தில் இருந்த பிரதமர் மோடி ட்விட்டரில் வெள்ளிக்கிழமை திடீர் அறிவிப்பை வெளியிட்டவர், "டெல்லிக்குத் திரும்பும் வழியில் லாகூரில் இன்று பிற்பகலில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்திக்கிறேன்" என்று குறிப்பிட்டார்.மற்றொரு ட்வீட்டில் ஷெரீபுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறியதைத் தெரிவித்த மோடி, "ஷெரீபுடன் பேசினேன். அவரை வாழ்த்தினேன்" என்று கூறியிருந்தார்.பிரதமர் மோடியின் இந்தத் திடீர் பயணத் திட்டம், வெளியுறவுத் துறை ரீதியிலும் சற்றே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மோடியின் இந்த முடிவு சர்வதேச அரங்கிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.2008 மும்பை தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா - பாகிஸ்தான் இடையே இரு தரப்பு பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்குவது என மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு முடிவு செய்தது. இது தொடர்பான அறிவிப்பை, இஸ்லாமாபாத்துக்கு இந்த மாதத்தின் துவக்கத்தில் பயணம் மேற்கொண்ட வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வெளியிட்டார். இந்தச் சூழலில், மோடியின் இன்றைய திடீர் பயணம் கவனிக்கத்தக்கது.

பாகிஸ்தானுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் மோடியை லாகூர் விமான நிலையத்தில் வரவேற்றார் அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப். | படங்கள்: பிடிஐட்விட்டரில் அறிவிப்பு... பாக். பிரதமர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பு...நவாஸ் உடன் பேச்சுபாகிஸ்தானுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, லாகூரில் அந்நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து பேச்சு நடத்தினார்.ஆப்கானிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு, தலைநகர் காபூலில் இருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்ட பிரதமர் மோடி வழியில் பாகிஸ்தானில் வெள்ளிக்கிழமை லாகூர் சென்றார்.லாகூர் விமான நிலையத்தில் காத்திருந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், மோடியின் கரங்களைப் பிடித்து புன்னகையுடன் வரவேற்றார். அதன் பின்னர், நவாஸ் இல்லத்தில் இரு தலைவர்களும் சந்தித்துப் பேசினர்.இதனிடையே, இந்தியப் பிரதமர் மோடியின் திடீர் வருகையையொட்டி, பாகிஸ்தான் தரப்பு பாதுகாப்பைப் பலப்படுத்தியிருந்தது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் இன்று பிறந்தநாள் வாழ்த்துகள் கூறினார்.

இரு தலைவர்களும் நவாஸ் இல்லத்துக்கு தனி ஹெலிகாப்டர் மூலம் சென்றனர்.

நவாஸ் இல்லத்தில் நடந்த அவரது பேத்தியின் திருமண நிகழ்ச்சியில், இந்தியப் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் இரு நாட்டு உறவு குறித்து பேச்சு நடத்தினர்.

மணமக்களை வாழ்த்திய பிறகு, நவாஸ் இல்லத்தில் இருந்து லாகூர் விமான நிலையம் புறப்பட்டார் மோடி.

தனது சில மணி நேர பாகிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு, லாகூர் விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்டார் மோடி.*ட்விட்டரில் மோடி திடீர் அறிவிப்புஆப்கானிஸ்தான் பயணித்தில் இருந்த பிரதமர் மோடி ட்விட்டரில் வெள்ளிக்கிழமை திடீர் அறிவிப்பை வெளியிட்டவர், "டெல்லிக்குத் திரும்பும் வழியில் லாகூரில் இன்று பிற்பகலில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்திக்கிறேன்" என்று குறிப்பிட்டார்.மற்றொரு ட்வீட்டில் ஷெரீபுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறியதைத் தெரிவித்த மோடி, "ஷெரீபுடன் பேசினேன். அவரை வாழ்த்தினேன்" என்று கூறியிருந்தார்.பிரதமர் மோடியின் இந்தத் திடீர் பயணத் திட்டம், வெளியுறவுத் துறை ரீதியிலும் சற்றே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மோடியின் இந்த முடிவு சர்வதேச அரங்கிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.2008 மும்பை தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா - பாகிஸ்தான் இடையே இரு தரப்பு பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்குவது என மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு முடிவு செய்தது. இது தொடர்பான அறிவிப்பை, இஸ்லாமாபாத்துக்கு இந்த மாதத்தின் துவக்கத்தில் பயணம் மேற்கொண்ட வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வெளியிட்டார். இந்தச் சூழலில், மோடியின் இன்றைய திடீர் பயணம் கவனிக்கத்தக்கது.