இதயமெனும் இருட்டறையில், இரு திருட்டு மனதுக்கள் ஒன்று நல்லது...
இதயமெனும் இருட்டறையில்,
இரு திருட்டு மனதுக்கள்
ஒன்று நல்லது போலவும்
ஒன்று தீயது போலவும் இருக்கக்கண்டேன்;
அவையிரண்டிற்கும்
ஒன்றின் பேச்சை ஒன்று
கேட்பதே இல்லையே
ஒன்றுக்கொன்று
குறைந்ததும் இல்லை;
இவ்வாறாய்ச் செய்க
என்று சொல்லும் ஒன்று
வேண்டாம் செய்யாதே
வில்லங்கம் உள்ளதெனும்
தடைகள் செய்திடுமே;
தானும் ஒத்து வராமல்
மற்றதையும் செய்ய
ஒத்துழைப்பு தராமலும்
உள்மனதென ஒன்றும்
வெளிமனதென ஒன்றும்
ஜெமினிகளைப் போன்று;
மடியும்வரை ஒன்றை
ஒன்று் நம்புவதே இல்லை
இந்த இருவருக்கும்
இடையில் நடக்கும்
போராட்டங்களே நமது
வாழ்க்கை என்றாகிறது;
இவர்கள் இருவரும்
ஒன்றுபட்டு விட்டாலே
நம் வாழ்வில் தலைகாட்டும்
துன்பம் துயரம் என்பது
காணாமல் போய்விடுமே .