நரகாசுரன் அல்ல நான் @@@@@@@@@@@@@@ நரகாசுரன்கூட மனித இனத்துக்குத்தான்...
நரகாசுரன் அல்ல நான்
@@@@@@@@@@@@@@
நரகாசுரன்கூட மனித இனத்துக்குத்தான்
ஊறுவிளைவித்தானாம்!
ஆனால் நம்மில் பலர்
உயிரினத்துக்கும் பயிரினத்துக்கும்
ஊறுவிளைவித்து
ஆனந்த பரவசத்தில்
அரத்தமில்லா இடியை நாண வைக்கும் ஓசையைக் கேட்டும்
கண்ணைப் பறிக்கும் ஒளியை ரசித்தும்
கேடுதரும் கந்தகப் புகையை உள்வாங்கியும்
களிநடமாடித் திரிகிறார்கள்!
@@@@@@@@@
65 வயது எனக்கு. 2 ஆம் வகுப்பு காலத்திலிருந்து பட்டாசு சனியனைத் தொடுவதில்லை. என் மனைவியும் மகனும் மகளும் என் வழியில் நடப்பவர்கள்.