எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

செவ்வந்தி பொழுதில் இலைகளுக்கு நடுவே தெட்டும் தொடாமலும் பட்டும்...

செவ்வந்தி பொழுதில் 
இலைகளுக்கு நடுவே 
தெட்டும் தொடாமலும்  பட்டும் படாமலும் 
சில்லென்ற தென்றல் காற்றாய் 
தெருவோரம் செல்லும் தாவணியே....!

அச்சாரம் போட்டார் போல்
என் அடிமனதை அடிமையாக்கி அழைய விட்டாய்..,!
அனல் காற்றாய் வீசும் 
உன் மூச்சுக்காற்று கூட சுகம் தரும்,
நீ என்னருகே செல்லுகையில்
இருள் சுருளும் இந்நிமிடம் 
ஒளி தரும் தேவதைக்காக காத்திருக்கிறேன்....! 

அன்புன் @கவி@கவி@

பதிவு : கவியழகு மா
நாள் : 18-Nov-16, 11:22 pm

மேலே