பெண்ணியம்...!!!! கூட்டு பறவைக்கும் கூண்டு பறவைக்கும் ஒரே சிறகுகள்...
பெண்ணியம்...!!!!
கூட்டு பறவைக்கும் கூண்டு பறவைக்கும் ஒரே சிறகுகள் தான் உண்டு...ஆனால் பறக்கமுடிவது என்னவோ கூட்டுப்பறவையால் தானே..!!
பெண்களின் கதையோ...
கூண்டிலொரு கூடுகட்டி பறக்கமுயலும் பறவை போலே...!!
பெண்ணியத்தின் குரல் விம்மி விம்மி ஒலித்தாலும்....வீரியத்தோடு ஒலித்தாலும்...கேட்பதற்குதான் யாருமற்ற நிலை...!!
மனதில் உதிக்கும் உணர்ச்சிகளை...
தன்னை மண்ணோடு புதைக்கும்வரை..
தன்னோடு புதைத்து வாழும் பெண்ணுக்கு முகத்தில் மட்டும் ஆனந்தத்தின் ரேகை...!!!
மகளாக இருக்கும் போது பெற்றவரின் அரவணைப்பு.... பின் மனைவியான பின்னே கணவனின் அரவணைப்பு... அதுவும் நிச்சயம் கிடைக்குமென எதிர்பார்க்கமுடியாது...!!
அள்ளித்தரப் பாசமிருந்தும்...அதை ஏற்க...தான் பெற்ற பிள்ளைகள் விரும்பாததைக் கண்டு உணர்கிறாள்.... காலம் மாறும்போது மனிதமனமும் மாறுகிறதென்று...!!
பெண்மையங்கே பயனற்றுப் போகிறது... பெண்மையங்கே மயானத்தில் வீழ்கிறது...!!
சிறுமியாய் என்றும் இருந்திருக்கலாமென்று அவள் மனதில் தோன்றும் நொடி அது...!!!
~சுந்தர்