எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எவரின் அனுதாபத்திலும் வாழ்ந்து விடாதே! உடலில் உயிருள்ளவரை கர்ஜித்து கொண்டே இரு, வாழ்ந்தாலும் சாய்ந்தாலும் தோற்றேன் என்று ஏற்றுக்கொள்ளாதே! தோல்வியை ஏற்றுக்கொண்டவன்  முயற்சியை விட்டுவிலகிவிடுவான், ஒவ்வொரு தோல்வியும் ஒரு ஆசான், தோற்றுக்கொண்டே இருந்தாலும் அதில் கற்றுக் கொண்டவை வெற்றியைத் தேடிதரும்,  தயங்காதே தனி ஒருவனாய் போராடு, போராடித் தோற்றவரையெல்லாம் இவ்வுலகம் போற்றிக்கொண்டு தான் இருக்கிறது... போராடு....

மேலும்

அன்பென்ப அன்புக்கு அன்பாக மற்றாங்கே

வன்பர்க்கு வன்பே பதில்.

மேலும்

நற்ச்செயல் 
நிறைக்கும் கைம் 
பெண்ணே - சி.எம்.ஜேசு 
------------------------------

உன்னால் முடியுது 
நிலவளவு நிமிர்ந்து 

அந்நிலவையும் 
புன்னகை முகமாக்க 

உன்னால் முடியுது 
உருவான சொந்தங்களை 
சந்தங்களாக்கி இசைக்க 

உன்னால் முடியுது 
வேரறுந்த மரத்தையும் 
பச்சை நிறமாக்கி வளர்த்தெடுக்க 

உன்னால் முடியுது 
உதவாத வாழ்வை உன்  உழைப்பால் வளர்த்தெடுக்க 

உன்னால் முடியுது 
சிறியது பெரியதெனும் 
பருவ பாகுபாடற்ற குடும்பத்தை உருவாக்க 

உன்னால் முடியுது 
சிந்தனைகளை செயல்களாக்கி அச்செயல்களை மகிழ்வாக்க 

உன்னால் முடியுது 
உன் விரல் வழுக்கிய வலயத்தை வெற்றிக் கோப்பைக்கான இடமாக்க 

உன்னால் முடியுது 
ஊர்சொல்லும் இழிச்சொல்லை இழுத்து 
அம்பாக்கி குறிபார்க்க 

உன்னால் முடியுது 
தீங்குகள் நிறைக்கும் உலகில் தீயாகி நல் தாயாக 
குடும்ப விளக்கேற்ற 

இனி நீ விதவை இல்லை 
உன் உழைப்பின்  வெளிச்சத்தில் உலகுக்கே 
வழிக்காட்ட வந்த தேவதை 

தொடரும் ...

மேலும்

எவ்வளவு முடியுமோ 

அவ்வளவுள் வாழ்வோம் 
இதயம் இன்ப மயமாகும் 

மேலும்

முடிந்தவரை ஆசையற்று 

வாழலாம் என்றால் இல்வாழ்க்கை 
இயக்கமற்று போகிறது 

மேலும்

பழைய கடன் அடைக்க 

புது கடன் கேட்டேன் 

வட்டி எட்டி பார்க்க எத்தநித்து 
இதயத்தை ரணமாக்கி விட்டது 

மேலும்

பல நாள் பிரச்சனைகள் 

ஒரே நாளில் கூட தீர்வு கிடைத்து விடுகிறது 


மேலும்

கட கடவென 

செயல் வேண்டி நின்றேன் 

தட தடவென 
தடுமாற்ற சூழலில் வாழ்க்கை 

மேலும்

கானல் நீர்   
விழியோரம் வழியும் நீர்! விவசாயி கண்ணில் வரும் நீர்! 

தனிமை வாட்டும் போது தானாக வரும் நீர்!
அம்மா என அழைக்க  இல்லை ஒரு பிள்ளை  அப்போ வரும் நீர்! 
என்னை மணக்க ஆள் இல்லை
 எனும் போதுமுதிர் கன்னிக்கு வரும் நீர்! 
இத்தனை நீரும்  விணாய் போனது
ஏனெனில்
இத்தனை நீரும் விணாய் போனது
நான் கண்ட கனவில் 
அது கானல் நீர்!  

மேலும்

கானல் நீர்

வெயிலில் தூரத்தில் பார்த்தால் நீர் அது கானல் நீர்! 
நம் வாழ்க்கையின் தூரத்தில் 
இருப்பதை பார்த்தாலும் 
கானல் நீர் தான்! 
எனவே 
பக்கத்தில் இருப்பதை 
வைத்து வாழ பழகிக் கொள்ளுங்கள்!  

மேலும்

மேலும்...

மேலே