எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

யாருமே கண்டுகொள்ளாத நான்… அந்தி மாலை மங்கும் வேளை...

யாருமே கண்டுகொள்ளாத நான்…


அந்தி மாலை
மங்கும் வேளை
பொங்கும் மேகங்கள்
அங்கும் இங்கும் மனிதர்கள்
திசையெங்கும் பறவைகள்
செங்கதிர் மலையை நெருங்கும் நேரம்
மாலை நேரத்து காற்று கூடும் காலம்
மஞ்சள் சேலை அஞ்சன விழியாள்
கொஞ்சும் மொழியாள் மிஞ்சும் அழகால்
கொள்ளை கொள்ள எல்லையின்றி
பொருந்த உடுத்தி அழகை அணிந்து
அடிகளெடுத்து மெள்ள மெள்ள 
புவிக்கு நோகா வண்ணம் 
பூம்பாதம் எடுத்து வைத்து நடந்துவருகின்றாள்
சேலை மடிப்புகள் கலையாமல் 
கால்களை மறைக்க போராடும் காற்று
கால்கள் தெரியும்போது எட்டிப்பார்க்கும் 
குட்டிப் பூச்சிகள் ஓடி மறையும் வண்டுகள்
மரக்கிளைகளில் உட்க்கார்ந்து பேசும் பறவைகள்
உறைந்துபோன இதயங்கள்
உடைந்துபோன மனங்கள்
ஒட்டிக்கொண்டு விட்டுப்பிரிய மனமில்லா
மணற்த் துகள்கள் அவள் பாதங்களின் ஓரங்களில்
அவள் கண்பட்டு காணாமல் போக
மறுக்கும் காட்சிகள் வண்ணமிகு எண்ணங்கள்
ஒளிமிகு வண்ணங்கள்
ரீங்காரம் செய்யும் சில்வண்டுகள்
அலைகளினூடே நடனமாடும் நண்டுகள்
அலைகள் ஓயாமல் துடிக்கின்றது
கரைதாண்டி அவளிரு விழிகளை 
காண கண்ணில் பேர் ஆவலோடு
கரை ஓயாமல் அலையைத் திருப்பி அனுப்ப
அவள் போகும் திசையைப் பார்த்தே 
கரைவது கூட தெரியாமல் கரை இருக்க
மலைகளின் கொஞ்சலில் தாளாத வானம்
கொஞ்சம் அதிகமாகவே வெட்கத்தில் சிவக்க
செவ்வொளி பட்டு நீல நிறக் கடல்நீர்
செங்குழம்பாய் மாற அதை எடுத்து
அள்ளி ஊற்றிக்கொண்டு கரை நோக்கி
பாயும் மரக்கலங்கள் கடலன்னை மடியில்
தவழ்ந்து தவழ்ந்து தன்னிலை மறந்து
ஓடி ஆடி மறையும் கடல் அலைகள்
மீண்டு வந்து கரைக்கடக்க துடிக்கும் அலை 
அதை பிடிக்க ஓடும் மழலை பூங்கரங்கள்
பட்டதும் ஒட்டிப்பிரியும் உப்புத்தண்ணீர்
ஆங்காங்கே எதிர்காலத்தில் வாழும் 
நிரந்தரமில்லா நிகழ்கால காதலர்கள்
அங்குமிங்கும் வாழும் கணவன் மனைவி
அலைகள் வந்து ஆதரவு தரும் தனி மனிதர்கள்.
.
.
.
.
யாருமே கண்டுகொள்ளாத நான்...

    -  வள்ளி மகன் மணிகண்டன்  

நாள் : 21-Sep-17, 12:27 pm

மேலே