எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நோய் தீர்க்கும் மூலிகை மருந்துகள்: அதிமதுரம் தீரும் நோய்கள்:...

நோய் தீர்க்கும் மூலிகை மருந்துகள்:

அதிமதுரம்
தீரும் நோய்கள்: இருமல், வயிற்றுப்புண், பசியின்மை, சுவையின்மை, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்.

அருகம்புல்
தீரும் நோய்கள்: இரத்தம் சுத்தமாக, வியர்வை நாற்றம், உடல் அரிப்பு, நமைச்சல், வெள்ளைப்படுதல்.

இஞ்சி
தீரும் நோய்கள்: பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டைக் கம்மல்.

எள்
தீரும் நோய்கள்: தேள், குளவி, பூச்சிகளின் விஷக்கடி, கட்டிகளுக்கு மேல் பூச்சு.

ஏலக்காய்
தீரும் நோய்கள்: அஜீரணம், குமட்டல், வாந்தி.

ஓரிதழ் தாமரை
தீரும் நோய்கள்:சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வெள்ளைப்படுதல்.

நோய் தீர்க்கும் மூலிகை மருத்துவம்:

சாதாரண சளி, காய்ச்சல் தொடங்கி, உயிரை பறிக்க கூறிய எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்கள் முதலான கொடிய நோய்களுக்கும் கூட மூலிகை மருத்துவம் உள்ளது. சரியான முறையில் கடைபிடித்தால் எந்த ஒரு கொடிய நோய்களையும் இயற்கையாக கிடைக்கும் இந்த மூலிகைகளை கொண்டே சரி செய்துவிடலாம் என அடித்து சொல்கின்றனர் மூலிகை மருத்துவர்கள்.

மூலிகைகள் மனிதர்களுக்கு மட்டுமல்ல... விலங்குகளுக்கும் கூட நோயை தீர்க்கின்றன. இயற்கையிலேயே சில விலங்குகள் அவற்றின் மூலிகை தன்மைகளை அறிந்து வைத்துள்ளன. கீரி-பாம்பு சண்டையில் கீரிக்கு ஏறிய விஷயத்தை முறிக்க அது தேடி செல்லும் மூலிகை செடிகள், குரங்குக்கு காய்ச்சல் வந்தால் அது தேடி எடுத்து வாயில் அதக்கி கொள்ளும் மூலிகை என நிறைய உள்ளன.

மருத்துவ முறைகளில் மூலிகை மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம், ஆங்கில மருத்தும், சீனர்களின் அங்கு பங்சர் மருத்துவம் என குறிப்பிட்ட வைத்திய முறைகள் உள்ளன. அவற்றில் சிறந்த இயற்கையான வைத்திய முறை மூலிகை மருத்துவம் என சொல்லப்படும் சித்த மருத்துவம் தான்.

பதிவு : ராஜ்குமார்
நாள் : 3-Oct-17, 4:43 pm

மேலே