தீபாவளி அலங்காரத்துடன் ஊர்வலம் வரும் புதிய ரயில்கள் சிங்கப்பூர்:...
தீபாவளி அலங்காரத்துடன் ஊர்வலம் வரும் புதிய ரயில்கள்
சிங்கப்பூர்: தீபாவளி என்றாலே ஆண்டுதோறும் லிட்டில் இந்தியா பகுதியில் அலங்காரத்துக்குப் பஞ்சம் இல்லை.
ஆனால் இவ்வாண்டு தீபாவளி அலங்காரங்கள் அதையும் தாண்டி செல்கின்றன.
தீபாவளியை முன்னிட்டு தீபாவளி கருப்பொருள் கொண்ட புதிய ரயிலை நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று அறிமுகப்படுத்தியது.
நூதன இந்திய நகை வடிவமைப்புகள், தாமரை பூக்கள், மயில்கள் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ள அந்த ரயில், வடகிழக்கு ரயில் பாதையில் நவம்பர் மாதம் மத்தி வரை பயணிகளுக்காக இயங்கவிருக்கிறது.
இனி லிட்டில் இந்தியாவில் மட்டுமல்ல, அங்கு செல்லும் வழியிலேயும் தீபாவளி குதூகலத்தை உணரலாம்.