எண்ணம்
(Eluthu Ennam)
தீபத்திருநாள்
தீபத் திருநாளில் இனிய
தீபத்தை ஏற்றிடுவோம்
தீயவற்றை எல்லாம்
பெரும் தீயிட்டு கொளுத்திடுவோம்
சாபத்தை பெற்றவர்கள் போல்
சலித்துப் போன வாழ்க்கையை
காண வேண்டி இருக்கிறது அதை
பலத்த கரம் கொண்டு அழித்திடுவோம்
ஏழைக்கு கஞ்சிதான் என்றநிலை மாறி
எல்லோர்க்கும் இங்கு சமநிலை ஓங்க
வல்லாரின் ஓங்கு கைகளை உடைத்து
வல்லானின் திருவருளை வேண்டி நிற்போம்
சொல்லாலும் செயலாலும் உண்மை கொண்டு
எல்லா மக்களும் நம்மவர் என்றெண்ணி
பேதமை தீயை கொளுத்திடுவோம்
பேராற்றுமைக்கு வழி சமைத்திடுவோம்
உதவியின்றி போராடும் முதியவர்களையும்
உணவின்றி தவிக்கும் நமது உறவுகளையும்
யாரோ என்றெண்ணாது நம் சொந்தங்கள்
என்று அவர்கள் துக்கத்திலும் பங்கெடுப்போம்
எத்தனை குழந்தைகள் வீதியிலே ஏங்கி
தவிக்கின்றார் சாலையிலேயே விழிகளில்
ஏக்கம் கொண்ட அபலைகளின் இனிய
வாழ்க்கைக்கு ஒரு தீபம் ஏற்றிடுவோம்
இன்றய அநீதி நிலை மாறிடணும் இங்கே
பெண்களும் பயமின்றி வாழ்ந்திடணும்
எல்லோருமே ஓரினம் ஒருறவு என்றே
இனிய தீபத்திருநாளை இனிதே வரவேற்போம்
தீபாவளி பண்டிகை கொண்டாடும் முறை
தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டு மகிழ்வர். பின் எண்ணெய்க் குளியல் கங்கா குளியல் செய்வர்நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர். பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பர். தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும். அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். இலேகியம் (செரிமானத்திற்கு உகந்தது) அருந்துவதும் மரபு.
தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும் குங்குமத்தில் கௌரியும், பூமாதேவியும், மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும். அந்த நீராடலைத்தான் 'கங்கா ஸ்நானம் ஆச்சா' என்று ஒருவருக்கொருவர் விசாரிப்பர். அன்றைய தினம், நதிகள் ஏரிகள், குளங்கள்கிணறுகளிலும், நீர்நிலைகளும் 'கங்கா தேவி' வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி. இலங்கையில் இந்தியா போன்று பெருமளவு தீபங்கள் ஏற்றுவது கிடையாது. இதனை விளக்கீடு என்ற திருவிழாக்காலத்திலேயே செய்கின்றார்கள்.
மேற்குநாடுகளில் தீபாவளிக்கு முக்கியத்துவம் உண்டு. மற்றபல இந்து விழாக்கள் போல் அல்லாமல் அனைத்து இந்துக்களும் எதோ ஒரு வழியில் தீபாவளியை கொண்டாடுவதாலும், கிறிஸ்துமஸ், இட் போன்ற கொண்டாட்ட காலங்களில் வருவதாலும், வட இந்திய இந்துக்களுக்கு இப்பண்டிகை அதிமுக்கியத்துவம் கொண்டதாக அமைவதாலும் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இங்கு இது Festival of Lights என்று அறியப்படுகின்றது. தீபாவளி பல்லினப் பண்பாட்டின் கொண்டாட்டங்களில் ஒன்றாக மருவி வருகின்றது.
தீபாவளி அலங்காரத்துடன் ஊர்வலம் வரும் புதிய ரயில்கள்
சிங்கப்பூர்: தீபாவளி என்றாலே ஆண்டுதோறும் லிட்டில் இந்தியா பகுதியில் அலங்காரத்துக்குப் பஞ்சம் இல்லை.
ஆனால் இவ்வாண்டு தீபாவளி அலங்காரங்கள் அதையும் தாண்டி செல்கின்றன.
தீபாவளியை முன்னிட்டு தீபாவளி கருப்பொருள் கொண்ட புதிய ரயிலை நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று அறிமுகப்படுத்தியது.
நூதன இந்திய நகை வடிவமைப்புகள், தாமரை பூக்கள், மயில்கள் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ள அந்த ரயில், வடகிழக்கு ரயில் பாதையில் நவம்பர் மாதம் மத்தி வரை பயணிகளுக்காக இயங்கவிருக்கிறது.
இனி லிட்டில் இந்தியாவில் மட்டுமல்ல, அங்கு செல்லும் வழியிலேயும் தீபாவளி குதூகலத்தை உணரலாம்.
சிங்கப்பூர் தீபாவளி
தீபாவளி என்றாலே கொண்டாட்டம்தான். அதிலும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கொண்டாடித் தீர்ப்பார்கள் இந்தியர்கள். இதில் சிங்கப்பூர் கொஞ்சம் சிறப்பு. ஏன்... இந்தியாவைவிடவே வெகு சிறப்பு! ஆம், தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பாகவே சிங்கப்பூரில் கொண்டாட்டம் ஆரம்பமாகிவிடும். தமிழர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள முக்கியமான ஒரு சாலையை வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரித்து அசத்தி விடுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அசத்தல் ஆரம்பமாகி விட்டது.
தீபாவளியன்று பெரும்பாலான தமிழர்கள் இங்கே கூடி கொண்டாடு வார்கள். அன்றைய தினம் சிங்கப்பூர் அரசின் பிரதமர் அல்லது அமைச்சர் என யாராவது ஒருவர் லிட்டில் இந்தியாவுக்கு வருகை தந்து பட்டாசு வெடிக்கும் வைபவத்தைத் தொடங்கி வைப்பதும் பல ஆண்டுகளாகவே நடக்கிறது.
தீபாவளிக்கு இங்கே விடுமுறை உண்டு. தீபாவளியானது ஞாயிற்றுக் கிழமையில் வந்தால், கூடுதலாக திங்கள்கிழமையன்று விடு முறை கொடுப்பதும் பெரும்பாலும் வழக்கத்தில் இருக்கிறது.
வெளிநாடுகளில் இருந்து சிங்கப் பூரில் வேலை பார்க்கும் தமிழர்கள்தான் பெரும்பாலும் லிட்டில் இந்தியாவில் கூடுவார்கள். சிங்கப்பூர் குடியுரிமையோடு இருப்பவர்கள், பெரும்பெரும் அரங்கங் களில் கூடி ஆட்டம் பாட்டம் என தீபாவளியைக் கொண்டாடுவார்கள்!
லிட்டில் இந்தியா வைபவங்களை, சிங்கப்பூர் அரசின் இந்து அறநிலைய வாரியம் (HEB), சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் (STB) ஆகியவற்றின் ஆதரவோடு லிட்டில் இந்தியா வியாபாரிகள் மற்றும் கலாசார அமைப்பு (LISHA) ஒருங்கிணைக்கிறது.
ஓவியா தீபாவளி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஓவியாவிற்கு மக்கள் ஆதரவு மளமளவென பெருகியது. மேலும் மக்கள் அந்த நிகழ்ச்சியை ஓவியாவிற்காகவே பார்த்து வந்தனர்.இந்நிலையில் ஓவியா, ஆரவ் -வை காதலித்துவந்தார் ஆனால் அந்த காதல் தோல்வியுற்றதால் ஓவியா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
ஆனாலும் அவருக்கு கிடைத்த மக்கள் ஆதரவு குறைந்த பாடில்லை. இதனால் வருகிற தீபாவளியை ஓவியா தீபாவளியாக இளசுகள் கொண்டாட உள்ளனர்.
அதாவது நன்கு ஒலிக்கும் பட்டாசுகளை ஓவியா பட்டாசு என்று ஸ்டிக்கருடன் கூடிய பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளது.
தீபாவளிக்கு விற்பனையாகும் புடவைகளுக்கு ஓவியா சாரீ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தீபாவளியை எப்படி வேண்டுமானாலும் கொண்டாடுங்க, ஆனா பாதுகாப்பாக கொண்டாடுவது முக்கியம்.
2017 தீபாவளி அன்று வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் மெர்சல் திரைப்படம் தீபாவளி அன்று ரிலீசாகிறது. இத்துடன் நயன்தாரா நடிப்பில் அறம் திரைப்படமும், சசிகுமார் நடிப்பில் கொடிவீரன் திரைப்படமும் தீபாவளி அன்று ரிலீசாகிறது.