எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

Geeths - எண்ணம் (public)
18-Sep-2017 12:33 pm

எண்ணம் காணொளி போட்டி

தோழர்களுக்கு வணக்கம்!
எழுத்து நடத்தும் எண்ணம் காணொளி போட்டி
தொடங்கும் நாள் - 18-09-2017
முடியும் நாள் - 27-09-2017


தோழர்களின் விருப்பப்படி போட்டி இறுதி நாள் 27 வரை நீடிக்கப் பட்டுள்ளது.

விதிமுறைகள்:
  • சமர்ப்பிக்கபடும் காணொளி உங்களது சொந்த காணொளியாக மட்டுமே இருத்தல் வேண்டும்.
  • காணொளி ஏதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலா

    மேலும்

    நிச்சயம் நீட்டிக்கப்படும் 21-Sep-2017 3:42 pm
    போட்டி நடைபெறும் காலத்தையும் கொஞ்சம் நீடிக்கலாமே! இதுவரை போட்டியின் விதிமுறைகளை தழுவி வெறுமனே மூன்று காணொளிகள் மட்டுமே பதிவாகி இருக்கிறது. 21-Sep-2017 11:40 am
    மன்னிக்கவும் தோழரே! கண்டிப்பாக இன்று பிழை திருத்தும் செய்து அனைவரும் பதிவிடும் பாடி மாற்றி அறிவிக்கப்படும். 21-Sep-2017 10:53 am
    மாற்றத்தை தான் எதிர்பார்க்கிறோம் ஆனால் எங்கும் எப்போதும் ஏமாற்றம் தான் அடைகிறோம். கடந்த காலத்தை நினைக்கும் போது நிகழ்காலத்தில் அவைகளை மீட்க முடியாது என்பதே உண்மை. இனி இருக்கின்ற சூழ்நிலையில் ஓர் ஆரோக்கியமான சூழ்நிலை இங்கு உருவாகுமா என்று என்னை போல் பலருக்கு சந்தேகம் இருக்கிறது. ஆனால் தனித்துவமான எண்ணங்களும் கட்டமைப்பும் இங்கு தான் இருக்கிறது என்பது தனித்துவமான அடையாளம். சுயமாக படைப்பாளிகள் செயற்படும் சுதந்திரம் எமது தளத்தில் தான் இருக்கிறது. நல்ல கவிதைகள் வறண்ட நிலம் போல ஆகக் கூடாது அவைகள் அருவிகள் போல் என்றும் பலரின் உள்ளங்களில் நீந்திக்கொண்ட இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். சுயநலம் என்று பலரும் நினைக்கலாம் ஆனால் என்னை புரிந்த ஒரு சிலர் நிச்சயம் அதனை வெறுப்பார்கள் என்பதே என் நம்பிக்கை. 21-Sep-2017 10:30 am

தீபாவளி பண்டிகை கொண்டாடும் முறை

தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை)  இட்டு மகிழ்வர். பின் எண்ணெய்க் குளியல் கங்கா குளியல் செய்வர்நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள்  புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர். பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள்  விரும்புகின்றனர். அன்று அநேக புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பர். தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள  இசையான நாதசுவரம் ஒலிக்கும். அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி  வாழ்த்து பெறுவர். இலேகியம் (செரிமானத்திற்கு உகந்தது) அருந்துவதும் மரபு.

தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும்,  லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும் குங்குமத்தில் கௌரியும், பூமாதேவியும், மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும். அந்த நீராடலைத்தான் 'கங்கா  ஸ்நானம் ஆச்சா' என்று ஒருவருக்கொருவர் விசாரிப்பர். அன்றைய தினம், நதிகள் ஏரிகள், குளங்கள்கிணறுகளிலும், நீர்நிலைகளும் 'கங்கா தேவி' வியாபித்து  இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.  இலங்கையில் இந்தியா போன்று பெருமளவு தீபங்கள் ஏற்றுவது கிடையாது. இதனை விளக்கீடு என்ற திருவிழாக்காலத்திலேயே செய்கின்றார்கள்.

மேற்குநாடுகளில் தீபாவளிக்கு முக்கியத்துவம் உண்டு. மற்றபல இந்து விழாக்கள் போல் அல்லாமல் அனைத்து இந்துக்களும் எதோ ஒரு வழியில் தீபாவளியை  கொண்டாடுவதாலும், கிறிஸ்துமஸ், இட் போன்ற கொண்டாட்ட காலங்களில் வருவதாலும், வட இந்திய இந்துக்களுக்கு இப்பண்டிகை அதிமுக்கியத்துவம்  கொண்டதாக அமைவதாலும் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இங்கு இது Festival of Lights என்று அறியப்படுகின்றது. தீபாவளி பல்லினப்  பண்பாட்டின் கொண்டாட்டங்களில் ஒன்றாக மருவி வருகின்றது.

மேலும்

தீபாவளி வண்ண விளக்கு அலங்காரம்

மேலும்

தீபாவளி அலங்காரத்துடன் ஊர்வலம் வரும் புதிய ரயில்கள்

சிங்கப்பூர்: தீபாவளி என்றாலே ஆண்டுதோறும் லிட்டில் இந்தியா பகுதியில் அலங்காரத்துக்குப் பஞ்சம் இல்லை.
ஆனால் இவ்வாண்டு தீபாவளி அலங்காரங்கள் அதையும் தாண்டி செல்கின்றன.




தீபாவளியை முன்னிட்டு தீபாவளி கருப்பொருள் கொண்ட புதிய ரயிலை நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று அறிமுகப்படுத்தியது.




நூதன இந்திய நகை வடிவமைப்புகள், தாமரை பூக்கள், மயில்கள் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ள அந்த ரயில், வடகிழக்கு ரயில் பாதையில் நவம்பர் மாதம் மத்தி வரை பயணிகளுக்காக இயங்கவிருக்கிறது.


தீபாவளி அலங்காரத்துடன்



இனி லிட்டில் இந்தியாவில் மட்டுமல்ல, அங்கு செல்லும் வழியிலேயும் தீபாவளி குதூகலத்தை உணரலாம்.

மேலும்

சிங்கப்பூர் தீபாவளி

தீபாவளி என்றாலே கொண்டாட்டம்தான். அதிலும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கொண்டாடித் தீர்ப்பார்கள் இந்தியர்கள். இதில் சிங்கப்பூர் கொஞ்சம் சிறப்பு. ஏன்... இந்தியாவைவிடவே வெகு சிறப்பு! ஆம், தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பாகவே சிங்கப்பூரில் கொண்டாட்டம் ஆரம்பமாகிவிடும். தமிழர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள முக்கியமான ஒரு சாலையை வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரித்து அசத்தி விடுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அசத்தல் ஆரம்பமாகி விட்டது.

தீபாவளியன்று பெரும்பாலான தமிழர்கள் இங்கே கூடி கொண்டாடு வார்கள். அன்றைய தினம் சிங்கப்பூர் அரசின் பிரதமர் அல்லது அமைச்சர் என யாராவது ஒருவர் லிட்டில் இந்தியாவுக்கு வருகை தந்து பட்டாசு வெடிக்கும் வைபவத்தைத் தொடங்கி வைப்பதும் பல ஆண்டுகளாகவே நடக்கிறது.

தீபாவளிக்கு இங்கே விடுமுறை உண்டு. தீபாவளியானது ஞாயிற்றுக் கிழமையில் வந்தால், கூடுதலாக திங்கள்கிழமையன்று விடு முறை கொடுப்பதும் பெரும்பாலும் வழக்கத்தில் இருக்கிறது.

வெளிநாடுகளில் இருந்து சிங்கப் பூரில் வேலை பார்க்கும் தமிழர்கள்தான் பெரும்பாலும் லிட்டில் இந்தியாவில் கூடுவார்கள். சிங்கப்பூர் குடியுரிமையோடு இருப்பவர்கள், பெரும்பெரும் அரங்கங் களில் கூடி ஆட்டம் பாட்டம் என தீபாவளியைக் கொண்டாடுவார்கள்!
 லிட்டில் இந்தியா வைபவங்களை, சிங்கப்பூர் அரசின் இந்து அறநிலைய வாரியம் (HEB), சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் (STB) ஆகியவற்றின் ஆதரவோடு லிட்டில் இந்தியா வியாபாரிகள் மற்றும் கலாசார அமைப்பு (LISHA) ஒருங்கிணைக்கிறது.

மேலும்

இந்தியாவில் 2017 தீபாவளி பூஜை தேதி

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 18-ந் தேதி வருகிறது.

மேலும்

தீபாவளி வாழ்த்துக்கள்

மேலும்


மேலே