எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எண்ணத்தில் எழுந்தது *********************** பணம் உள்ளவர்களுக்கு பண்டிகை உண்டு....

  எண்ணத்தில் எழுந்தது 
***********************


பணம் உள்ளவர்களுக்கு பண்டிகை உண்டு. 
பரம ஏழைகளுக்கு ?வசதிகள் இருப்பவர்க்கு 
விழாக்கள் உண்டு. 

வீதியில் வசிப்பவர்க்கு ?

கொண்டாடி மகிழ்வது 
தவறில்லை..

விழாக்கள் வருவது வாழ்க்கையில் 
வழக்கம் தானே ...

பக்தியுள்ளோர்க்கு
வாடிக்கையது ...

பகுத்தறிவாளர்க்கு 
வேடிக்கையது..
ஆனாலும்வறுமையில் வாடுவோரை 
நினைத்திடுங்கள் !

இல்லார்க்கு கொடுத்து 
மகிழுங்கள் !
ஆதரவற்றோர் அகங்குளிர உதவுங்கள் !

பசியால் வாடுபவர்களுக்கு 
அன்னமிடுங்கள் !

முதியோர் இல்லம் சென்று கொண்டாடுங்கள் !

எளியோரின் ஏக்கங்களை எரித்திட முற்படுங்கள் !

ஆடையுமின்றி தவிக்கும் வறியோர் உடுத்திட
ஆடை அளியுங்கள் !

கட்டளையில்லை
கருணை காட்டிடுங்கள் !

ஆணயிடவில்லை 
ஆதரவு அளித்திடுங்கள் !

வேண்டுகோளாக 
வைக்கிறேன் 
வையத்தில் ஒருவனாக !

அன்போடு கேட்கிறேன் 
அகிலத்தில் ஒருவனாக !

உள்ளன்போடு கேட்கிறேன் 
உங்களில் ஒருவனாக !

பழனி குமார்  

நாள் : 17-Oct-17, 9:03 pm

மேலே