எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பெண் அழுகையும் ஆனந்தமும் சிரிப்பின் விளையாட்டாய் தத்தித்தவிழ்ந்த வேளையில்...

                        பெண் 

 அழுகையும்  ஆனந்தமும் 
 சிரிப்பின் விளையாட்டாய்
 தத்தித்தவிழ்ந்த வேளையில்
 குழந்தையானவள்.......
 சுற்றித்திரியும் பட்டுப்பூச்சியை
 எட்டிப்பிடிக்கும் வட்டமாய்
 ஒடித்திரிந்த தினங்களில்
 சிறுமியானவள்..........
 அன்பையும் பாசத்தையும்
 அளவாய்    அளித்த
 அந்நாளிலே
 தங்கையானவள்........
 மண்ணையும் விண்ணாய்
 நினைத்து தலைகுனிந்து
 நடைபோட்ட நாளிலே
 இளம்பெண்ணானவள்.....
 சுற்றத்தின்முன் எட்டுத்திக்கும்
 ஒலிக்க அக்னியின்முன்
 நின்ற நிமிடத்தில்
 மனைவியானவள்.......
 துன்பத்தால் துவண்டவேளையில்
 மடியில்  சுமந்ததிலும்
 கல்லறையிலும் சுமக்கும்
 தெய்வமான தாயானவள்....           
                              பெண்ணே....

 

பதிவு : SangaviM
நாள் : 26-Oct-17, 8:08 pm

மேலே