எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அணைவருக்கும் அன்பான வணக்கங்கள் என்னால் முன்பு போல் அதிகமாக...

அணைவருக்கும் அன்பான வணக்கங்கள் 

என்னால் முன்பு போல் அதிகமாக கவிதைகளை வாசிக்க முடியவில்லை. அந்த மனநிலையில் நான் இல்லை என்பதால் மீண்டும் சில நாட்கள் உங்களையும் தளத்தையும் விட்டு பிரிந்து செல்ல நினைக்கிறேன். அது நிரந்தரமானதா? இல்லை  தாற்காலிகமானதா? என்று தெரியாது.  இப்போதெல்லாம் யாருடைய  கவிதையை வாசித்த பின்னும் கருத்துச் சொல்ல பயமாக இருக்கிறது. ஒரு வேளை நான் பிழையான பின்னூட்டம்  கொடுத்து விடுவேனோ என்ற அச்சம் மனதில் விளைகிறது. அது மட்டுமின்றி வாழ்க்கையில் நிறைய காயங்கள் மனதளவில் பட்டாச்சி. இனியும் புதிதாக வேதனைகளை வாங்க என்னிடம் சக்தி கிடையாது. ஒரு வாரம் இல்லை இரு வாரம் உங்கள் எல்லோரையும் விட்டு பிரிந்து செல்கிறேன். முடிந்தளவு உங்களுக்குள் பகிரப்படும் படைப்புக்களை குறைந்தளவாவது  வாசியுங்கள். ஆயிரங்கள் உழைப்பதை விட  கலைக்கு கிடைக்கும் உண்மையான வாழ்த்து மிகப்பெரிய செல்வம். நான் பிரிந்து போகிறேன். அணைத்து நண்பர்களும் அன்போடு பழகுங்கள். செல்லும் முன் அணைத்து தோழர்களுக்கும் "இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்" என்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன் 

நாள் : 19-Dec-17, 8:09 pm

மேலே