சுதந்திர தினம் என் பார்வையில் **************************************** சுதந்திர தின...
சுதந்திர தினம் என் பார்வையில்
****************************************
சுதந்திர தின வாழ்த்தை எமக்கு பகிர்ந்த அனைவருக்கும் நன்றி..
சுதந்திரம் பெற்றுவிட்டோம் என்று கொண்டாட மனம் வரவில்லை இன்று..
சுதந்திர தினமான இன்றும்
ஏதோ ஒரு மூலையில்
பெண் கற்பழிக்கப்பட்டிருப்பாள்..
ஏதோ ஒரு மூலையில்
குழந்தை கடத்தப்பட்டிருக்கும்..
இராணுவ பகுதியில் வீரர்கள் கொல்லப்பட்டிருப்பர்..
இதை யாராலும் மறுக்க முடியுமா?
இந்திய நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து
72 ஆண்டுகள் ஆயினும் நாட்டு மக்களுக்கு
இன்னும் முழு சுதந்திரம் கிடைக்கவேயில்லை..
இன்றைய நாளில்
நம் தேசிய கொடிக்கு
மரியாதை செலுத்துவதற்கு முன் நம் நாட்டு விடுதலைக்காக போராடி உயிர்விட்ட தியாகிகளையும்,
நம் நாட்டை பாதுகாக்க எல்லையில்
போராடிக் கொண்டிருக்கும்
இராணுவ வீரர்களையும்
மண்டியிட்டு வணங்குகிறேன்..
ஜெய்ஹிந்த்