எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பங்குனிப் பலா சுளை : 1 விரைவான வார்த்தை...

 பங்குனிப் பலா


 சுளை : 1

 விரைவான வார்த்தை (QUICK JUDGEMENT),  வேகமான கருத்து (QUICK STATEMENT) ஆகிய பகிர்வுகள் சில பல நேரங்களில் சங்கடங்களை ஏற்படுத்திவிடுவதை பல நிகழ்வுகளிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

வீட்டளவில் தீர்க்கமுடியாத பல பிரச்னைகள் ஊர்ப் பெரியவர் தலையீட்டில் -  பூதாகாரமாகாமல் சுமுகமாகத் தீர்க்கப்பட்டு வருவதைக் காண்கிறோம். ஊர்ப்பெரியவரின் ஒரு சொல்லுக்கு அவ்வளவு மரியாதை. காரணம் : பலரும் பாராட்டத்தக்க நீண்டகால நோக்கில உண்மையாகவே  பாதிப்படைந்தோர் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் அனைவரும் ஏற்கத்தகுந்த அறிவுரைகளைப்  பிரகடனப்படுத்திய சீர்மிகு தன்மை அதில் மிளிர்ந்திருப்பதுதான். 

நாடோடிக்  கதைகளில், “There was a great  grandma -  affectionately called Avvai -  ஓர் ஊர்ல  ஓர்  பாட்டி இருந்தாங்க அவங்கள எல்லாரும் அன்பா அவ்வைப்பாட்டி அப்படீனு அழைச்சாங்க’ என்று தொடங்கும்  கட்டுரைகள் பலவற்றைப் பார்த்திருக்கிறோம். .  "ஒளவை வாக்கு, செவ்வை வாக்கு’ என்ற முதுமொழியும் வழக்கத்திலுண்டு.கேள்விப்பட்டிருப்பீங்க...   ஒளவைப் பாட்டிப் பாத்திரம் நம் மனக்கண்முன் கொண்டுவருபவை :   முதுமை அவரது் என்பது முதல் அடையாளம்;  பெருந்தமிழ்ப் புலவர், பக்தி சிரத்தையுடையவர்; ஒழுக்க சீலர், செங்கோல் ஏந்திய பெருந்தகை மன்னர்களையும் தன் சொல் திறனுக்குப்பணிய வைக்கும் வாக்கு வன்மை, எப்போதும் ஊர் ஊராய்ச் சென்று மக்களுக்கு அறிவுரை, அறவுரை பகரும் பரந்த உள்ளம்  ஆகியவை அவரது  அடையாளங்கள்.  

பாரத ஒருங்கிணைப்புக்கு முதலில் பணியாத ஓரிரு வல்லரசர்களும் சர்தார் பட்டேலின்  ஆணைகட்கு கட்டுப்பட்டது அவரது  புத்தி கூர்மை மற்றும் தீர்மான மிகு தன்மை.

1. "இவரது கூற்றை நூறு சதவிகிதம்  நம்பலாம் "என்ற நம்பகத் தன்மையை நாம் வளர்த்துக்கொள்ளளும் வழிமுறைகளை சிறுவயதிலிருந்தே கற்றுக் கொள்ளவேண்டும்.

2. வாயைத்திறக்கு முன் மூளைக்கு வேலை கொடுக்க வேண்டும்.

3. அதன் பின் நாம் உதிர்க்கும் வார்த்தை எக்காலத்திலும் "நின்று பேச வேண்டும்".

நம்முடைய நாக்கைச் சுக்கானுக்கு ஒப்பிடுகிறது பைபிள் (ஜேம்ஸ் 3: 4-5). சுக்கானைத் தம்வசம் எத்தகைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என அறிவர் மாலுமிகள்.

பக்கங்கள் பல நிறைந்த நீதிப்பகிர்வுகள் பலவற்றை விட  தரம் நிறைந்த  கூர்மதி சேர் நீதிபோதனை வரிகள் சில -  தாரகமந்திரமாயப் பல நூறாண்டுகள் நிறைந்து நிற்கின்றன.       

::  கடையநல்லூரான் 

பதிவு : KADAYANALLURAN
நாள் : 24-Mar-19, 6:17 pm

மேலே