உருவங்கள் மாறலாம் உள்ளங்கள் மாறலாம் எண்ணங்கள் மாறுபடலாம் எழுத்துக்கள்...
உருவங்கள் மாறலாம்
உள்ளங்கள் மாறலாம்
எண்ணங்கள் மாறுபடலாம்
எழுத்துக்கள் வேறுபடலாம்
காலநிலையில் மாற்றம்வரும்
காலமும் நம்மை மாற்றிவிடும் !
ஆனால்,எது எப்படி இருப்பினும்
நான் என்றும் ஒரேநிலை
என்வழி ஒரேவழி
மாறாத இலக்கு
என்றும் நேர்வழி
வகுத்திட்ட நல்வழி
பகுத்தறிந்த பயணம்
சுயநலம் அறியாவழி
பொதுநலம் என்வழி
உள்ளவரை இது உறுதி
உலகத்தின் நலன் கருதி !
பழனி குமார்