நேற்றுவரை எனக்கு என்னை தெரியவில்லை தேடினேன் கிடைக்கவில்லை நேசம்...
நேற்றுவரை எனக்கு
என்னை தெரியவில்லை
தேடினேன் கிடைக்கவில்லை
நேசம் உன்னிடத்தில்
பெற்றதும் புதிதாகப்
பிறந்தேன்
நான் காணும் உலகம் நீ
வந்தபின் அழகானது
வாழ விரும்பாத எனக்கு
தனித்தீவில் உன்னுடன்
இயற்கை அழகை
ஆனந்தமாய் ரசித்து வாழ
ஆசை வந்தது உன்னில்
இனிமையாய் ஒன்றாக
அணைப்பில் என் உயிர்
அணைந்திட ஏக்கம்
அடைந்தது நீ வருவாயா
என் கண்ணே