எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நம்மை கடந்துச் சென்றவர்களைக் காட்டிலும் நம்மெதிரே வாழ்ந்து மறைந்தவர்கள்...

நம்மை
கடந்துச்
சென்றவர்களைக்
காட்டிலும்
நம்மெதிரே
வாழ்ந்து
மறைந்தவர்கள்
அதிகம்...


அவர்கள்
விட்டுச்சென்ற
அடையாளங்கள்,
கூறிச்சென்ற
வார்த்தைகள் ,
நீதிநெறிகள்,
வாழ்ந்துக் காட்டிய
வழிமுறைகள் ,
பயணம் செய்த
பாதைகள்,
அறிவுறுத்திய
அறவழி
ஆலோசனைகள் ,
நல்வழிக்
கொள்கைகள்,


நாம் வாழும்
காலம்வரை
நெஞ்சில்
நினைவுகளாக,
ஒலித்திடும்
குரலாக ,
தொடர்ந்து
வந்துக் கொண்டு
இருக்கும்...


அவர்கள்
உறவாகவும் ,
நட்பாகவும் ,
கொள்கைப் பற்றுள்ள
தலைவர்களாகவும்,
நெறியாளர்களாகவும்
இருக்கலாம்...ஆனால் நாம்
அதைப் பின்பற்றி
நடக்கிறோமா
என்பதுதான்
கேள்விக் குறியாக
இருக்கிறது...?


இது இயற்கை
என்றும்
நமக்களித்த
வழித் துணை !


என்றும் நாம்
இதை சிந்திப்பதும் 
இல்லை..!



பழனி குமார்
13.12.2019

நாள் : 13-Dec-19, 5:34 pm

மேலே