மழையே... கரையெல்லாம் உடச்சுப்போகும் காட்டாதது வெள்ளமே....! செவலக்காடு காத்திருக்கு...,...
மழையே...
கரையெல்லாம் உடச்சுப்போகும்
காட்டாதது வெள்ளமே....!
செவலக்காடு காத்திருக்கு...,
சீமையெல்லாம் காஞ்சிருக்கு...!
தரிசு நிலம் தவங்கெடக்கு...,
தன்பணைதான் தவிச்சிருக்கு..!
பாழ் நிலமெல்லாம்..., பரசிப்போகும் பெருமழையே..!
பாவிமக்க நாங்களுந்தான்...,
பரிதவிச்சு காத்திருக்கோம்...!
புழுதிநிலம் பூத்துக்குழுங்க...,
பூமியெல்லாம் பூரிச்சுப்போக...,
இங்க கொஞ்சம் பெய்யட்டுமே....!
ஈரக்கொல நனையட்டுமே....!
ஆட்டுக்குப் புல்லருக்க. ..,
அடைமழை தான் பெய்யட்டுமே..!
மாட்டுக்கு தீவனமாக...,
மாரிதான் பெய்யட்டுமே...!
மானத்த காக்கத்தான்....,
மானாவரியாவது விளையத்தான்...,
மக்க கஷ்டம் போக்கத்தான்...,
மாரி நல்லா பொழியட்டுமே...,
மக்கள் பசி தீரட்டுமே.....!