எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அவளில்லா அந்திப்பொழுது... நஞ்சுண்ட நெஞ்சமது..... வெஞ்சுரத்தால் வெந்தது போல்...!...

அவளில்லா அந்திப்பொழுது...

நஞ்சுண்ட நெஞ்சமது.....
வெஞ்சுரத்தால் வெந்தது போல்...!
அழுந்து பட்ட விழுப்புண் மேல்..,
எறிந்து விட்டு வேல் பாய்வது போல்...!
நீ உதிர்த்த ஒற்றைச்சொல்...,
நெஞ்சை புண்ணாக்கியது பெண்ணே...!
பித்திகை சூடிய பெண்மையே. ..!
கொடிதினும் கொடிது...,
இளமையில் வறுமையாம்....!
ஆனால்...,
அதனினும் கொடிது...,
நீயில்லாத்தனிமையடி....!
மல்லிகை மலர் சூடி...,
அல்லிதழ் நடையோடு...,
நடந்து வரும் பூமகளின்..,
சொல்லில் தேன் தொடுத்த-
மெல்லிதழ் ஓசைகூட...,
வில்லில் வரும் அம்பாய்....,
என் விழி தைத்துப்போனதடி.!ம ஞ்சள் நிற ஆதவன் ஒளி..!
நெஞ்சில் பட்டு அழுத்துதடி....!
நீயில்லாத நேரந்தனில்....!

பதிவு : renu
நாள் : 27-Feb-20, 6:18 pm

மேலே