எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தர்மம் ... வாங்கும் கைகளோ வறுமையின் பிடியில்....! கொடுக்கும்...

தர்மம் ...
வாங்கும் கைகளோ 
வறுமையின் பிடியில்....!
கொடுக்கும் கைகளோ 
இறைவனின் மடியில்...!
வறுமை எனும் கிணற்றில் 
மூழ்கிப்போன நீந்தல் அறியா மீன்களை..
பெருமை எனும் தூண்டில் எரிந்து 
காக்கத் துடிக்கும் மனங்களே.....
காத்தாலும் கருவாடகிப் போவார்கள் 
ஏழை என்ற சான்றிதழில்...
கொடுக்கும் கைகள் கொடுக்கட்டுமே..
வாழும் உயிர்கள் வாழட்டுமே....!
தற்பெருமை எண்ணம் வேண்டாமே...!
பசியை விட தாகம் கொண்ட தன்மானத்தை அனைவரும் உணரட்டுமே..!
வலது கை கொடுப்பதை 
இடது கை உணராவிட்டாலும் 
இரு கை ஏந்தி கேட்பவருக்கு உணர்உண்டு... ஏழை/ பிச்சைக்காரர்/
என்ற பட்டமெல்லாம் மாறட்டுமே.....!
ஏழையாய் பிறந்தவன் ஏழையாய் மறைவதில்லை....!
செல்வந்தனாய் பிறந்தவன் 
செல்வந்தனாய் மறைவதில்லை....!
ஊரறிய தர்மம் செய்தாய்...
உன்னிடம் தர்மம் பெற்ற வரையும் 
ஊரறிய செய்தாய்...அவர் ஏழை என்று...<
உறக்கத்தில் பிரியும் 
இந்த உலகத்தில்
ஏழையும் இல்லை...
பணக்காரனும் இல்லை....!
தர்மம் ஒன்றே இறையுலகத்தின் எல்லை..!
தன் உள்ளம் உணர்ந்து தர்மம் செய்
பிறர் உள்ளம் குளிர மறைத்து செய்....

Create by ✍️ thamim ✍️

நாள் : 10-Apr-20, 11:25 am

மேலே