எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தர்மம் ...
வாங்கும் கைகளோ 
வறுமையின் பிடியில்....!
கொடுக்கும் கைகளோ 
இறைவனின் மடியில்...!
வறுமை எனும் கிணற்றில் 
மூழ்கிப்போன நீந்தல் அறியா மீன்களை..
பெருமை எனும் தூண்டில் எரிந்து 
காக்கத் துடிக்கும் மனங்களே.....
காத்தாலும் கருவாடகிப் போவார்கள் 
ஏழை என்ற சான்றிதழில்...
கொடுக்கும் கைகள் கொடுக்கட்டுமே..
வாழும் உயிர்கள் வாழட்டுமே....!
தற்பெருமை எண்ணம் வேண்டாமே...!
பசியை விட தாகம் கொண்ட தன்மானத்தை அனைவரும் உணரட்டுமே..!
வலது கை கொடுப்பதை 
இடது கை உணராவிட்டாலும் 
இரு கை ஏந்தி கேட்பவருக்கு உணர்உண்டு... ஏழை/ பிச்சைக்காரர்/
என்ற பட்டமெல்லாம் மாறட்டுமே.....!
ஏழையாய் பிறந்தவன் ஏழையாய் மறைவதில்லை....!
செல்வந்தனாய் பிறந்தவன் 
செல்வந்தனாய் மறைவதில்லை....!
ஊரறிய தர்மம் செய்தாய்...
உன்னிடம் தர்மம் பெற்ற வரையும் 
ஊரறிய செய்தாய்...அவர் ஏழை என்று...<
உறக்கத்தில் பிரியும் 
இந்த உலகத்தில்
ஏழையும் இல்லை...
பணக்காரனும் இல்லை....!
தர்மம் ஒன்றே இறையுலகத்தின் எல்லை..!
தன் உள்ளம் உணர்ந்து தர்மம் செய்
பிறர் உள்ளம் குளிர மறைத்து செய்....

Create by ✍️ thamim ✍️

மேலும்

*பஞ்ச பாண்டவர்களில் முதல்வரான தர்மர் தான் உலகிலேயே மிக அதிக தர்மம் செய்தவர் என்பார்கள்.*

*தன்னைத் தவிர இவ்வுலகில் அதிக தானம் செய்பவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது என்பது தர்மரின் எண்ணம். இதுவே, அவருக்கு அகந்தையாக மாறி விடக் கூடாது என்ற எண்ணம் கண்ணபிரானுக்கு ஏற்பட்டது.*

*எனவே அவர் தர்மருடன் மலை நாட்டுக்கு சென்றார். அந்த நாட்டை மகாபலி சக்கரவர்த்தி ஆண்டு வந்தார்.*

*அங்குள்ள ஒரு வீட்டிற்குச் சென்று குடிப்பதற்கு தண்ணீர் கேட்டனர்.*

*அவ்வீட்டு பெண்மணி தங்கச் செம்பில் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்தாள். அவர்கள் குடித்து முடித்ததும் செம்பை வீசி எறிந்து விட்டாள்.*

*தர்மர் அவளிடம், "தங்கச் செம்பை பத்திரமாக வைத்திருக்க வேண்டாமா? தெருவில் வீசி எறிந்து விட்டீர்களே,'' என" ஆச்சரியமாகக் கேட்டார்.*

*அதற்கு அந்த பெண்மணி, "எங்கள் நாட்டில் ஒரு முறை பயன் படுத்திய பொருளை மறு முறை பயன் படுத்துவதில்லை, என அலட்சியமாக சொல்லி விட்டு போய் விட்டாள்.*

*அந் நாட்டின் செல்வச் செழிப்பை எண்ணி வியந்தார் தர்மராஜன். அவர்கள் மகாபலியின் அரசவைக்கு சென்றனர்.*

*கண்ணபிரான் தர்மரை மகாபலியிடம் அறிமுகப்படுத்தி, "இவர் தான் இவ்வுலகிலேயே அதிக தர்மம் செய்தவர், பெயரே தர்மர்,'' என்றார்.*

*மகாபலி தர்மரின் முகத்தில் கூட விழிக்கவில்லை.*

*"கண்ணபிரானே! தாங்கள் சொல்வதெல்லாம் சரி தான். என் நாட்டு மக்களிடம் உழைப்புக்கு பஞ்சமில்லை. எல்லோரிடமும் செல்வம் குவிந்து கிடக்கிறது. எனவே "பிச்சை' என்ற சொல்லுக்கே இடமில்லை. அதனால் "தர்மம்' என்ற வார்த்தைக்கும் இங்கு அவசியமில்லை. எனவே அவர்கள் தானம் பெறவேண்டிய அவசியமும் இல்லை. இவரது நாட்டில் ஏழைகள் அதிகமாக இருக்கிறார்கள் போலும். எனவேதான் எல்லோரும் தானம் கேட்டு வருகின்றனர்.* *இவ்வளவு ஏழைகளை தனது அரசாட்சியின் கீழ் வைத்திருக்கும் இந்த தர்மரின் முகத்தைப் பார்க்க வெட்கப் படுகிறேன்,'' என்றார்.*

*தனது ஆட்சியின் நிலைமையை நினைத்து தலை குனிந்தார் தர்மராஜா.* 

*தர்மம் என்ற பெயரில் இலவசங்களை வழங்கி சோம்பேறிகளை பெருக்கும் நாடு தலை குனியத் தான் வேண்டும்.*

*"தர்மம் பெறுவதும் பிச்சை எடுப்பது தான்*

*மிக அருமையான செய்தி தமிழக மக்களுக்கு"*

மேலும்

ஆளும் மனத்தின் ஆழம் பதியவேண்டிய நற்கருத்து... 16-Jan-2018 7:11 pm
வாழ்த்துக்களுக்கு நன்றி....!!!!! 16-Jan-2018 1:49 pm
கதையின் நீதி நன்று . தர்மம் என்ற பெயரில் இலவசங்களை வழங்கி சோம்பேறிகளை பெருக்கும் நாடு தலை குனியத் தான் வேண்டும்.* ------ஓரளவு இதன் நியாயத்தை ஏற்கிறேன் . தர்மம் என்றால் வெறும் ஈதல் என்ற பொருள் மட்டுமல்ல. அச்சொல்லின் பொருள் மிக மிக விரிந்தது. வாழ்த்துக்கள். 16-Jan-2018 11:27 am

மேலே