எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நாம் வாழும் வாழ்க்கையை வரலாறாக மாற்றுவது நம் கையில்...

நாம் வாழும் வாழ்க்கையை வரலாறாக மாற்றுவது நம் கையில் தான் இருக்கிறது. வந்தோம் , வாழ்ந்தோம் , சென்றோம் என்பதல்ல வாழ்க்கை . ஏதாவது ஒரு இலட்சியத்துடன் பயணிப்பதும் , அதனை சாதிக்க நினைப்பதும் தான் முற்றுப்பெற்ற வாழ்க்கையாகும் .அதுமட்டுமன்றி நாம் கொண்ட கொள்கையில் ஒருதுளியும் மாற்றம் இல்லாமல் இறுதிவரை உறுதியாக வாழ்வதும் , நம்மைப்பற்றி மற்றவர் நாம் மறைந்தப் பின்னும் பேசும்படி வாழ்ந்துக் காட்டுவதும், பலரும் நம்மை பின்பற்ற வைப்பதும் தான் உண்மையான வாழ்க்கை .


நம்முடன் பயணிப்பவர்கள் , உறவாடுபவர்கள் , நம்மீது அக்கறை செலுத்துபவர்கள் என்றும் நிலையாய் உடனிருப்பர் என்பது நிரந்தரமல்ல .நாம் தனி ஒருவராக இருந்தாலும் , மனம் தளராமல் நமது இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். அதற்கு ஏற்றாற்போல நம்மை தயார்படுத்திக் கொள்ளல் அவசியம் .

இது அனுபவத்தில் நான் உணர்ந்தது .பல சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறு அதற்கு சான்றாக விளங்குகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

புரிந்து நடப்போம் ,
புவியில் வாழும்வரை !
அறிந்து செயலாற்றுவோம்
அகிலத்தில் உள்ளவரை !


பழனி குமார்
13. 7.2020

நாள் : 13-Jul-20, 10:17 pm

மேலே