எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உனக்காக ஒரு கவி.....! கருவிலே உருவான கவியே.... கவலைகள்...

உனக்காக ஒரு கவி.....!

கருவிலே உருவான
கவியே....
கவலைகள் களையவந்த இசையே...
கண்ணுக்குள் நிறைந்த ஒளியே...
கண்ணியமாய்க் காத்திடுவோம் உனையே....!

பேறுபெற்றோம் ஆதலாலே உன்னை....
பேறுகொண்டோம்....
பேசும்மொழி அதிலே எமை மறந்தோம்...
பேச்சினாலே கொள்ளைகொண்ட பேரழகே....!

தந்தைக்கும் தந்தையாகி...
தாயிற்கும் தந்தையாகி...
தாங்குமுந்தன் அன்பிற்கு...
தகுமோ வார்த்தை ஏதும் கூறிவிடின்.....?

உள்ளத்தால் வெள்ளையிவன்...
உயிர்கொள்ளை கொண்ட கண்ணன்...
உறவுக்குள் உயர்வு இவன்....
உள்ளங் கவர்ந்திட்ட மன்னனும் இவனே....!

விடியலாய் வந்துதித்தான்...
விழியிற்குள் நிறைந்து நிற்பான்....
விந்தை பலபுரிந்து...
விலைமதிப்பில்லா இன்பந்தரும் இறைவரமும் இவனே.....!

இருளுக்குள் ஒளியாக....
இமைக்குள் விழியாக....
இயற்கையின் அற்புதமாய் எனக்குள் உருவான....
இணையற்ற ஓருறவே....!

அழகிய புன்னகையால்...
அனைத்தையும் சாதிப்பான்...
அகரத்தை அழகாக ....
அர்த்தமுடன் உச்சரிப்பான்...!

அவனை வர்ணித்தால்....
அவனுக்காய்க் கவிவடித்தால்...
அடங்காது ஒரு கவியில்...
அவன் புகழாரம் பாட....!

தொடர் கவியாய்ப் பாடுகிறேன்...
தொடங்கிய இக் கவியை...
தொடர் காவியமாய் ஆகிட்டும்...
தொழுதே ஆசீ கூறும் என்செல்வன் நீடூழி வாழவென....!!!

நாள் : 24-Aug-20, 10:05 pm

மேலே