எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆசை !!! சுற்றித் திரியும் பறவை விழிகளின் வழியே...

ஆசை !!!

சுற்றித் திரியும் பறவை 
விழிகளின் வழியே  
இவ்வுலகைக் கண்டுவிட ஆசை !!

இரைதேடும் அவைகள் என்றேனும் 
இறக்க நேரிடுமாயின்
அவ்விழிகளிலே உறைந்துவிட ஆசை!!

அர்த்தம் கொள்ளா மழலையின்  
பேச்சுப் புதிர்களை 
ஒருமுறை அவிழ்த்துவிட ஆசை!!

என்றோ நினைவில் பதிந்த 
காதலின் நினைவுகளில் 
மீண்டும் வாழ்ந்துவிட ஆசை!!

கொட்டித் தீர்த்த மழையில் 
இலைகொண்ட மிச்சத் துளிகளில்
முழுவதும் நனைந்துவிட ஆசை!! 

பிறைகளின் பொழுதில் மறையும் 
நிலவின் முழுமுகம் 
கண்டு ரசித்துவிட ஆசை!!

காற்றில் பரவும் மணங்களின்
காலடிச் சுவடுகளை 
என்னுள் கணித்துவிட ஆசை!!

பதிவு : vignesh28040
நாள் : 20-Jan-21, 12:52 pm

மேலே