எங்கிருந்தோ வந்தாய்... என்னுள் நுழைந்தாய் .... ரத்த நாளங்களில்...
எங்கிருந்தோ வந்தாய்...
என்னுள் நுழைந்தாய் ....
ரத்த நாளங்களில் நிறைந்தாய் ..
மொத்த உயிரிலும் கலந்தாய் ...
உன்னைத் தவிர யாரும் என்னை தீண்ட நீ விடவில்லை ...
நீ தீண்டிய பின் என் நாட்கள் தனிமையை தாண்டவில்லை ...
நான் தேய் பிறையாய்...
என்னுள் நீ வளர்பிறையாய்...
என் மூச்சை இழுத்து நீ சுவாசித்தாய்...
நான் இறந்த பிறகு கூட யாருக்காகவும் என்னை விட்டுக் கொடுக்கவில்லை...
உன் பெயரிலேயே என்னை பத்திர பதிவு செய்து கொண்டாய்...
"கொரோனா நோயாளி"
என்று ..!!!