எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எரிதழல் எடுத்துவா தோழி!!!-------------------------------------------- இறைவனே பெண்களுக்கு ஏனிந்தப்பிறவி தந்தாய்?...

எரிதழல் எடுத்துவா தோழி!!!--------------------------------------------
இறைவனே
பெண்களுக்கு ஏனிந்தப்பிறவி தந்தாய்?
இல்வாழ்க்கை ஆனாலும்
பொது வாழ்க்கை ஆனாலும்
அவர்களுக்கு
நல் வாழ்க்கையே  இல்லையே !!
நிலவரங்கள் மாறி
கலவரங்கள் ஆகும்போது
களப்பலி ஆவதெல்லாம்
பெண்கள்தானே !!
பெண்மையை ...
கோவில் கருவறைக்குள்
சக்தியாய்
பார்க்கும் உலகம்
மனிதக் கூட்டத்தில்
சகதியாய் பார்க்கிறதே !!
இனியொரு விதி செய்வோம்
இன்னொரு முறை
துகிலுரியப்படும்போது
கண்ணனுக்காகக்
காத்திருக்க வேண்டாம்
தீ மிதிக்கச் சொல்லும்
ராமன்களை
செவிமடுக்க வேண்டாம்

தமிழ் மகளாம்
கண்ணகியாய் மாறிடுவோம்
மதுரை எரிந்தது போல்
மனித மிருகங்கள்
எரிந்து அழியட்டும்.இனிமேலாவது
மாதரையும் மதிக்கின்ற
மானுடம் தழைக்கட்டும்.
மாமுகி .



நாள் : 25-Jan-24, 11:30 am

மேலே