சேர்த்தவர் : கனகரத்தினம் s, 1-May-14, 2:33 am
Close (X)

ஒப்பந்த தொழிலாளிக்கும் ஓய்வுதியம் வழங்கிட வேண்டும்

மாண்புமிகு ,தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அவர்களுக்கு ,இன்று அரசுத் துறையில் பணிபுரிபவர்களை விட ஒப்பந்தத் தொழிலாளியாக பணிபுரியும் தோழர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதென்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள். அதே தருணம் இன்று அரசு ஊழியர்களை விட ஒப்பந்தத் தொழிலாளிகளின் வேலை பளுவும் பங்களிப்பும் மிகவும் அதிகம். காரணம் நிரந்தரமற்ற தன்மையும் மற்றவர்களை அனுசரிக்க வேண்டிய நிர்பந்தமும் தான் காரணம் யாரோ ஒருவர் நலம் பெற தொழிலாளிகளை பகடைக்காயாய் பயன்படுத்துவதென்பது நியாயமற்றசெயலன்றோ ?இருப்பினும் குடும்பச் சூழலை மனதில் கொண்டு குறைந்த ஊதியத்தையும் அதே நேரத்தில் பனிச் சுமையும் ஏற்றுக்கொண்டு பனிச் செய்யும் என்போன்றவர்க்கு அரசின் நலத்திட்ட உதவிகள் ஏதும் கிடைக்காமல் வயது குன்றிய நிலையில் என்னை நம்பி இருக்கும் குடும்பத்திற்கு எந்த பலனும் கிடைப்பதற்கு வழி இல்லாமல் உழைக்க முடியா வயதிலும் ஓய்வெடுக்க வழியின்றி பரிதவிக்கும் என்போன்றோர் ஏராளம் !

அய்யா அவர்கள் தயை கூர்ந்து மனுவை பரிசீலித்து சம்மந்த பட்ட அதிகாரிகளுக்கு உரிய ஆணை பிறப்பித்து இந்த உழைப்பாளர் தினத்தில் இனிப்புச் செய்தியாய் ஒப்பந்தப் பணியாளர்களுக்கும் ஒய்வூதியதிட்டதை அறிமுகம் செய்திட ஆவணச் செய்திட வேண்டி மிக்கப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .

இப்படிக்கு
ஒப்பந்தத் தொழிலாளிகள்

நானும் இந்த மனுவை வழிமொழிகிறேன்
இந்த மனுவை 4 பேர் வழிமொழிந்துள்ளனர்.
(அனைத்து நபரும் தொலைபேசி எண் சரிபார்க்கப்பட்டவர்கள்)

ஒப்பந்த தொழிலாளிக்கும் ஓய்வுதியம் வழங்கிட வேண்டும் மனு | Petition at Eluthu.com



மேலே