அந்தி மழை பொழிகிறது

அந்தி மழை பொழிகிறது.....

ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது.......

அந்தி மழை பொழிகிறது.....

ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது.......



இந்திரன் தோட்டத்து முந்திரியே...

மன்மத நாட்டுக்கு மந்திரியே.........



அந்தி மழை பொழிகிறது.....

ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது.......



தேனில் வண்டு.. மூழ்கும் போது.....

பாவம் என்று வந்தாள் மாது.....



நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம்.. என்பாய்....

தண்ணீரில் மூழ்கிக்கொண்டே தாகம் என்பாய்.....



தனிமயிலே.. வெறுமயிலே... எத்தனை நாளடி... இளமயிலே.............



எத்தனை இரவுகள்..... சுட்டன... கனவுகள்....

இமைகளும்.. சுமையடி... இளமயிலே.............



அந்தி மழை பொழிகிறது.....

ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது.......



தேகம் யாவும்.. தீயின்... தாகம்......

தாகம் தீர.... நீதான்.... மேகம்.......



கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது...................

தண்ணீரில் நிற்க்கும் போதே... வேர்க்கின்றது........



நெஞ்சு பொறு..., கொஞ்சமிரு......

தாவணி விசிறிகள் வீசுகிறேன்...............

மன்மத அம்புகள் தைத்த இடங்களில்

சந்தனமாய் எனைப்பூசுகிறேன்........................!



அந்தி மழை பொழிகிறது.....

ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது.......



சிப்பியில் தப்பிய நித்திலமே...

ரகசிய ராத்திரி புத்தகமே........



அந்தி மழை பொழிகிறது.....

ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது....


கவிஞர் : வைரமுத்து(3-Jan-13, 3:02 pm)
பார்வை : 0


மேலே