தைமகளே வருக...(பொங்கல் கவிதை போட்டி)

குளித்து வந்த கொண்டை நீர்
கூடமெங்கும் கோலமிட
தை மகளை வரவேற்க‌
தயாரானோம் தமிழ் மகளாய்

குத்தி எடுத்த முதல் அரிசி
குமிழ் சிரிப்புடன் காத்திருக்க‌
நெற்றி பொட்டாய் சூரியன் வந்து
நீண்ட வெளிச்சம் தந்தான்

கேரளத்து சந்தனத்தில்
கிளைவிட்ட அருகு சொருகி
பொங்கள் தழை பறித்து
பிள்ளையார்க்கு முன் வைத்தோம்

உழுத‌ திசை பார்த்து
ஒற்றை வகிடு அடுப்பு செய்து
பனை ஓலை எடுத்து
பத்திரமாய் பற்றவைதோம்

அளவு நீர் வைத்து
அடிகரும்பு வெல்லம் இட்டு
கொதித்த பானை நோக்கி
கொலவை செய்து வரவேற்றோம்

தித்திக்கும் பொங்கள்.. தேன்சுவை கரும்பு..
வானம்பார்த்த பனங்கிழங்கு.. வயல்விட்டு வந்த மஞ்சள்..

எல்லாவற்றையும் அர்பணிக்கிறோம்
இன்பம் கொடு தை மகளே...!

எழுதியவர் : தினைகுளம் கா.ரமேஷ் (10-Jan-13, 5:27 pm)
பார்வை : 636

மேலே