காதல் என்பது கவிதை அல்ல கலவரம்...!!!

பெண்ணே பெண்ணே மறைந்து விடு,
என் இதயத்தை திருப்பி கொடு,
கண்ணே கண்ணே தொலைத்து விடு,
அவள் நினைவினை அழித்து விடு..!!
என் இதயம் தின்ற பின்பு தான்
காதல் வெறுப்பதா..??
நான் இறங்கியே வந்தாலும்
பணிய மறுப்பதா..??

அன்பே உன் வார்த்தைகள்
நெருப்பை பற்ற வைத்து
விளக்கை அணைக்கிறதே...!!
என்னுடன் நீ இருந்தால்
மரணம் தொலைத்து
தினமும் இருப்பேன்..!!
என்னை விட்டு நீ தொலைந்தால்
மரணம் அழைத்து
உன்னை அனுப்பி வைப்பேன்..!!

நீ சுயநலமாய் இருக்க
என் சுதந்திரம் பறிப்பதாய் நினைத்து
ஏமாந்தது என்னவோ நீயே..??
பொங்கி வழிந்த உன் காதல் நாடகம்
என் இதயம் திருட நினைத்து
தோற்று போனதே மிச்சம்..!!
உன்னால் புரிந்தேன்
காதல் என்பது கவிதை அல்ல
மூளைக்கு இதயம் தரும் கலவரம்..!!

எழுதியவர் : மனோ ரெட் (31-May-13, 5:30 pm)
பார்வை : 284

மேலே