எட்டாம் அறிவு சொல்கிறது...!!!!

--------------------நட்பு-------------------------
முன்னேற வழி காட்டவும்,
முன்னேறினால் முதுகில் குத்தவும்,
முந்தி கொண்டு வரும் உயிர்- நட்பு..!!!

------------------காதல்-------------------------
இல்லையெனில் செய்து பார்க்கவும்,
இருந்தால் விட்டுவிடவும் தோன்றுகின்ற
இக்காலத்து அதிசய நோய்- காதல்

-------------------உறவு--------------------------
எங்கேயோ இருப்பது போல் தெரியும்,
அருகில் சென்றால் மறைந்து விடும்,
இருந்தும் இல்லாத கானல் நீர்- உறவு

------------------உண்மை---------------------
பேசுபவனுக்கு பெருமையாகவும்,
பார்ப்பவர்களுக்கு கிறுக்கனாகவும்,
தோன்ற செய்கின்ற மாயை- உண்மை

------------------பணம்----------------------
எதையும் செய்ய வைக்கும்,
எதற்கும் அடி பணிய மறுக்கும்,
கடவுளை படைக்கும் கடவுள்- பணம்

-------------------பக்தி--------------------------
தேவையெனில் காலில் விழவும்,
வேண்டாமெனில் எட்டி உதைக்கவும்,
தேவைப்படுகிற அதிசய பிறவி- கடவுள்
------------------------------------------------------------

ஏழாம் அறிவு வரை கண்ட மனிதர்களுக்கு,
எட்டாம் அறிவு சொல்வது
ஒன்றும் புதிதாக தெரியாது....!!!
இது எட்டாம் அறிவல்ல
யாருக்கும் எட்டாத அறிவு....!!

எழுதியவர் : மனோ ரெட் (12-Jul-13, 2:38 pm)
பார்வை : 203

மேலே