நிறமில்லாத வண்ணங்கள்...!!!

கண்கள் இருந்தும் காட்சிகள் இல்லை,
எங்கள் உலகில் வெளிச்சமே தொல்லை,
இருந்தும் பார்க்கிறோம்,
இறைவனிடம் கேட்கிறோம்,
அரிதாய் அமைந்த வாழ்வை
இனிதாய் மாற்ற வேண்டுகிறோம்...!!!

வண்ணம் சிதறும் வானவெடிகளும்,
வளைந்து நிற்கும் வானவில்லும்,
கலர் கலராய் சத்தமிடும் வளையல்களும்,
வாசம் வீசும் பூக்களும்,
சூரிய சந்திர வெளிச்சமும்,
புதிய வண்ணமாய்
எங்களுக்கு தெரிந்ததில்லை,
மகிழ்வை ஒருநாளும் தந்ததில்லை..!!!

நிறங்கள் நிஜமாய் இருக்கலாம்,
நீரும்,பரவிய நிலமும்
வானும்,உதிர்ந்த மலரும்,
மயிலிறகும்,சுடும் நெருப்பும்
பொய்யான நிழலாகவே
எங்களின் உலகில் தெரிகிறது..!!
நிழல் கூட நிழல் ஆகி விடுவது
எங்களின் பார்வையில் மட்டுமே...!!

நிறம் சொல்லும் பெயரின்
சத்தம் வைத்தே,
என்ன நிறமென பாழாய் போன
காது அறிந்து கொள்கிறது..!!!
பார்க்க வேண்டிய கண்களிலோ
நிறமில்லா வண்ணம் புகுந்து
இருளென்னும் ஒரு வண்ணமே காட்டுகிறது...!!

பிறப்பில் பிழைகள் எதுவுமில்லை,
குறைகள் என்றும் கண்டதில்லை,
குற்றம் எதிலும் பார்ப்பதில்லை,
இருந்தும் உலகம் எங்களை
புதிதாய் பார்க்கிறதே,
புறந்தள்ளி வெறுக்கிறதே...!!!

எழுதியவர் : மனோ ரெட் (16-Jul-13, 3:22 pm)
பார்வை : 546

மேலே