போதும்டா சாமி இந்த காதல்...????

போடி போடி எங்கேயோ போடி,
என் உயிரின் மிச்சம் அறுத்து போடி,
தூரம் சென்று மறைந்து போடி,
உன் துகில் மூடித் தொலைந்து போடி....!!!

முதல் நாளில் காதல் முகவரியை தந்தது,
பின்னாளில் காதல் முகம் தொலைத்து தவிக்குது,
உருகி உருக்கி காதல் தந்தாளே,
என் இதயம் உள்ளே ஓட்டை போட்டாளே..!!!
மூடி மறைத்து வெக்கம் தந்தாளே,
காதல் பிச்சை கேட்க செய்தாளே..!!

அவளை பார்த்தவுடன் நானும்
கொஞ்சம் நிலைகுலைந்து நின்றேன்,
அவள் கேட்டவுடன் நானும்
என்னை விற்று தொலைந்தேன்..!!

அவள் என்னனென்னமோ பேசினாள்,
காதல் தீயை வீசினாள்,
மயிலிறகாய் நெஞ்சில் கூசினாள்,
பின் அவளே இதயம் இரண்டாய் கீறினாள்..!!

அவளை விட்டுப் போகச் சொன்னாள்
நான் கேட்க மாட்டேன் என்றேன்,
என்னை விட்டு போக துணிந்தாள்
நான் வழி விட்டே நின்றேன்..!!!

உயிரை லேசா கடத்தி போனாளே,
போகும்போதே ஏளனமாய் சிரித்தாளே
என் காதலை மிதித்து சிதைத்தாளே,
அவள் பெண்ணல்ல ஆறாத புண் தானே..!!

ஆத்மார்த்தமான காதல் என்றாளே,
ஆத்திரமாக பிய்த்து எறிந்தாளே,
கண்ணில்லா காதல் என்றாளே
கண்ணை பிடுங்கி சென்றாளே..!!

போதும்டா சாமி இந்த காதல்,
அடிபட்டு தெளிந்த நொந்த காதல்...!!!

எழுதியவர் : மனோ ரெட் (26-Jul-13, 3:09 pm)
பார்வை : 207

மேலே