கத சொல்லப்போறோம்

First இத ஞாபகம் வச்சிக்கோ, நாம எல்லாரும் ஒரு முதியோர் இல்லத்துல ஒன்னா சந்தோஷமா வாழ்ந்துட்ருகோம்,இது கதையோட Starting கெடையாது.

கனா கண்டேனடி தோழி...
என் அருகில் நீ இருப்பது போல்(நீங்க வெளிய போய்ருந்தீங்க),
அந்த இருளில் கையை கிடக்கையில் நகர்த்தி தேடினேன் உனை.

கை ஸ்பரிசித்து விட்டது உனை.....(இது கனவா நிஜமா தெரியவில்லை)
உன் அருகில் வந்து தலையை வருடிவிட்டேன்.(இது நிஜம் என்று சொல்லியது உள்மனம்)

இன்னொரு கை உன் கையை பிடிக்க எண்ணி பிடித்தது உன் இடுப்பில்
யாரோ சொருகிவிட்டு சென்ற கத்தியை,
தூக்கி வாரிபோட்டது.

கை முழுக்க இரத்தம் ,
கீழே தரை முழுக்க ரத்தம், மூச்சு பேச்சின்றி என் முன்னே என் உயிர்

கதறி பார்க்கிறேன்,
கத்தி பார்க்கிறேன்
எழுந்திருக்கவே இல்லை என் தோழி .
தூக்கி கொண்டு ஓடினேன் ஹாஸ்பிடலுக்கு,நான்
ஓடும் போது நீ மயக்கத்திலருந்து எழுந்துட்ட,எனக்கு அப்ப தான் உயிரே வந்தமாதிரி இருக்கு,உங்கிட்ட உடனே
வலி அதிகமாயிருக்கா,
யார் உன்ன கத்தியால குத்தனதுனு

கேட்டதுக்கு நீ பதில் சொல்லிட்ருக்க, நான் உன்ன தூக்கிட்டு ஓடிட்டே கேட்டுகிட்ருக்கன்
(முதியோர் இல்லத்துலருந்து ஹாஸ்பிடல் கிட்டயே தான்)


ஒரு Flashback இந்த இடத்துல கதையில
" ஒரு X னு ஒரு ஆள் நாமர்க்க Old age home அ
அடையணும்னு ஆசபட்றான்"

அந்த ஆள் எப்டி அந்த இடத்த பிடிக்கலாம் & அங்க யாரும் வாழ்ந்ததுக்கான தடயமே இல்லாம பண்ணணும்னு நெனச்சான்.


அத அவன் Rowdyங்க கிட்ட சொல்லிட்ருக்கும் போது அத நீ(நான்) (அவ)வீடியோவா Capture பண்ணிட்டா(டன்)
(எல்லா
படம் மாதிரி தான் நீ வீடியோ எடுத்தத பாத்ததும் உன்ன கொல்லணும்னு துரத்தறான். நீ (நான்) அவங்கிட்ட இருந்து தப்பிச்சு ஓடும்போது
அவன் உ(எ)ன்ன குத்திட்டான்.

(அப்ப உன் மனநிலை எப்டிருக்கும்னு ஒரு Writer ஆ யோசிச்சது)

உடனே என் Friendah
கடைசியா ஒரு தடவ பாக்கணும்,

அவகிட்ட எல்லாத்தையும் சொல்லணும் ,
அவ மடியிலயே செத்துபோய்டணும்னு நெனச்சு, என்ன பாக்க நீ வந்த
ஒரு Second balance பண்ணியிருந்தா என்ன நீ எழுப்பியிருப்ப.

என் பக்கத்துலயே விழுந்துருக்கா அது தெரியாம நான் தூங்கிட்ருக்கன், அதுக்கு அப்றம் கனவுனு நெனச்சு
(எனக்கும் அவளுக்கும் சின்ன சண்ட)
உன்ன தேடி
நெஜத்துல உன் தலைய வருடிட்ருக்கன்

அப்ப கூட உனக்கு இப்படி ஆச்சுனு எனக்கு தெரியாம உன் பக்கத்துலயே இருந்துருக்கன் Jas.

இதல்லாம் சொல்லிட்ருக்கும் போதே hospitalah reach பண்ணிட்டோம், உன்ன hospital உள்ள தூக்கிட்டு ஓடுறன், எங்க Doctor ? எங்க Doctorனு.

Doctorah பாத்த உடனே
என் Friendah காப்பாத்துங்கனு அவர் கால்லயே விழுந்துட்டன்
(என்னா கத்தியால குத்தனது போலீஸ் கேஸ்.எனக்கு Complaint குடுக்கலான் நேரம் கெடையாது .எனக்கு என் Friend உயிர் தான் இப்ப முக்கியம்)
உடனே உன்ன ICUla admit பண்ணி, உனக்கு Operation நடக்கறதுக்கு
B+ve blood அவசரமா தேவ எங்ககிட்ட இல்லனு சொல்றாங்க.
என்னோடதோ O+ve .
அந்த Second G.H la blood availableah இருக்குனு சொன்னதும் அங்கயிருக்கவங்க கிட்ட வண்டிய கேட்டு வாங்கிட்டு வேகமா போய்ட்டு உடனே வாங்கிட்டு வந்து கொடுத்து உனக்கு Operation உள்ள நடந்துட்ருக்கு,
நான் கண்ணாடி வழியா உன்னயே பாத்துட்ருக்கன்.

எனக்கு என் Friendah முழுசா குடுத்துடு கடவுளேனு வேண்டிகிட்டன், என் blood group B+ve ah இல்லாம போய்டுச்சேனு அப்ப தான் கவலபட்டன்.

Operation Success (என் Friend எங்கிட்ட திருப்பி வந்துட்டா.உன்ன உடனே பாக்கணும்னு துடிச்சிட்டு கதவ திறந்தன்),
உன்ன இப்ப பாக்கமுடியாது rest எடுக்கணும்னு சொல்லிட்டாங்க.

நான் அதுவரைக்கும்
எனக்குள்ளயே வச்சிட்ருந்த கோவத்தலாம் ஒன்னு சேத்து , உன்ன எந்த கத்தியால குத்தினானோ அதே கத்தியாலயே அவன்
உயிர நான் துடிக்க துடிக்க எடுக்கணும்னு


உன்ன பாக்காமா கூட (பாக்கமுடியலயேனு நெனச்சிகிட்டே) கெளம்பி போய்டன்,
அப்றம் நான் போய்ட்டு அவன கத்தியால குத்தி குத்தி சாகடிச்சிட்டன்,
இப்ப தான் எனக்கு மனசு ஆறுச்சி.

உன்ன பாக்கணும்னு ஆவலா ஓடிவந்தன்.அப்ப hospitalah என்ன நடந்ததுனா
உனக்கு pain killer போட்டு nurse போகும்போது அவங்களுக்கே தெரியாம

Sidelarntha water bottleah தள்ளிவிட்டு போய்டாங்க, நான் உன்ன பாக்க roomkula வேகமா வரும்போது கீழ தண்ணீயிருக்கறத பாக்காம கால வச்சி

கால் வழுக்கி கீழ தரையில போய்ட்டு டங்குனு தல இடுச்சி ரத்தம் கொட்டுது ,
நான் உன்ன பாத்தே ஆகணும்னு எவ்ளோ try பண்ண(ற)ன் , என்னால உன்ன பாக்க முடியல

நான் உன்ன கடைசியா ஒருதடவ பாத்தே ஆகணும்னு jas jasnu கத்தறன்,
உன் காதுல என் குரலோட சத்தம் (தவிப்பு & இயலாமை & வலி) விழுந்து, நீ எழுந்து பாக்கற.

உடனே நீ பதறிபோய்ட்டு துடிக்கற, யாராவது வாங்களேனு கத்தற, ஆனா அந்த சமயத்துல எல்லாரும் தூங்கிட்ருக்கறதால யாரும் வரல.

நீ bedlarnthu இறங்கலாம்னு try பண்ற ஆனா உன்னால முடியல , நீ எங்கிட்ட வரணும்னு bedlarnthu உருண்டு கீழ விழுந்துட்ட.

உன் இடுப்புலருந்து ரத்தம் கொட்டுது , தலையில வேற பலமா அடிபட்டுடுச்சி, நான் பதறி போய்ட்டு உன் பக்கத்துல தவழ்ந்து வந்தன்,

நான் ஜாஸ் ஜாஸ்னு
உன் பக்கத்துல படுத்துட்டே ஜாஸ்.....னு கத்தறன்.உன் கைய கெட்டிமா புடிச்டன் (எந்த எமனும் என்ன தாண்டி வர முடியாது(உன்ன யாராலும் எங்கிட்டருந்து பிரிக்க முடியாது))


முடிவு 1:

நான் உன் கைய புடிச்சிகிட்டே இறந்துட்டன்.
என் இதய துடிப்பு நிக்கறத கேட்ட (உணர்ந்த) நீ
அதே நொடி இறந்துட்ட.


முடிவு 2:

நான் மட்டும் தான் இறந்தன் ஜாஸ், நீ இறக்கல.

முடிவு 3 :

நம்ம 2 பேரையும் காப்பாத்திட்டாங்க (Or)
Nurse கீழ தண்ணீய தள்ளவே இல்ல.

அதுக்கப்றம் நாம எல்லாரும் ஒன்னா ஊரே பாத்து கண்ணுபட்றாமாதிரி சந்தோஷமா இருந்தோம்.


~~~~~~~~~~~~~~~~~~

உன்ன இந்த சுயநலமான உலகத்ல தனியா விட்டுட்டு போறனேன்ற வலியிலயே
உன்னயும் எங்கூடவே கூப்டுட்டு போறமாதிரி
முடிவு 1 அ எழுதினன்


உன்ன கதையில கூட
இறக்க விடமாட்டன் ஜாஸ், இதுல 2 வது தான் நடக்கும்...

மூனாவது நடந்தாலும் மகிழ்ச்சி தான்
அப்படி இருந்தாலும்
எப்படி இருந்தாலும்
நான் தான் முதல்ல இறப்பன்

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (25-May-16, 8:16 pm)
பார்வை : 290

மேலே