நான் ஸ்வாதி

என் அலறல் கேட்கிறதா...?
ஓ.. தேசமே..! உன்
மூவண்ணக் கொடி – என்
மூச்சுக் காற்றில் தான் அசைகிறது
என்னைக் கவனிக்கத் தவறியது
ரயில் நிலையக் காமிராக்கள் மட்டுமல்ல
அரசாங்கமும் தான்
Code தெரிந்த எனக்கு
சமூகக் கேடு தெரியவில்லை
தமிழச்சி பிணத்தின் மேல்
பிராமனத்திப் பட்டம் எதற்கு..?
மனிதா..!
கொட்டுகின்ற தேள்
உனக்கு எந்த வகை சாதி..?
ஓட்டுகின்ற மீசை
உனக்கு எந்த சாதி தந்த மீதி..?
நான் பிணமாகும் போது
என்னருகே பிணங்கி நின்றவர்களே..!
உங்களை பிணமாக்கியது
அரசாங்கம் தானோ..?
சாப்ட்வேர் கற்றதால்
சட்டம் தெரியவில்லை
என்னைக் கொன்றவனை
பிடிப்பதற்கேனும் சட்டம் இருக்கிறதா..?
வாக்களிக்க விரலில பூசிய மை
அழியும் முன்னே
என் உசிரு போனத அறிய
அரசாங்கமே...!
உனக்காவது உயிர் இருக்கா,,?

எழுதியவர் : செ.பா.சிவராசன் (27-Jun-16, 9:32 pm)
பார்வை : 75

மேலே