காதல் காத்திரு பகுதி 6
அஞ்சலி கல்லூரியில்
அஞ்சலியின் தோழி மானசா : என்னடி.... பாய்பிரண்ட் அ பின்னாடி வச்சிட்டு ஊர் சுத்திட்டு வர போல...
அஞ்சலி: அழுக்கு மூஞ்சி.. எச்சி காரி துப்புறதுக்குள்ள ஓடிப்போயிடு
அஞ்சலியின் தோழி ஸ்ரேயா: ஹே... ஏன் இப்போ கோபப்பட்ற.. யாரு அவன்
அஞ்சலி: இல்லடி... அவன் யாருன்னே தெரில..
ஸ்ரேயா ஓ யாருன்னே தெரியாமத்தான் டபுள்ஸ் போனீங்களோ.. ஓகே ஓகே..
மானசா: மரண மாஸ்..செம்ம ஜோடி பொருத்தம்.. சித்தார்த்த விட இவன் சூப்பர் டி..
ஸ்ரேயா: ஹே லூசு
மானசா: ஐயோ..ஸாரிடி ஸாரிடி.. பூனக்குட்டி... கோபப்படாத
அஞ்சலி கோபத்துடன் நகர்ந்து விடுகிறாள்..
ஸ்ரேயா: அட காட்டுக் கொரங்கே.. எப்போ எத பேசணும்னே தெரில உனக்கு... இரு நா போயி சமாதான படுத்துறேன்...
கல்லூரியில் உள்ள திண்ணை ஒன்றில் அமர்ந்திருக்கிறாள் அஞ்சலி...
ஸ்ரேயா: புஜ்ஜிக்குட்டி...
அஞ்சலி: என்னடி
ஸ்ரேயா கோபமாடி செல்லம்
அஞ்சலி ஏன்..எதுக்கு கோபம்...
ஸ்ரேயா: ( மனதுக்குள் ஹப்பா மறந்துட்டா) வாடி எதாது சாப்டலாம்
அஞ்சலி: ( மனதுக்குள் மறக்க வேண்டியது இன்னும் நினைவிருக்கு.. ஆனா அத நினச்சி இப்போ என் சந்தோசத்த கெடுத்துக்க விரும்பல ) வா வா வா..... எனக்கும் பசிக்குது...
இருவரும் மகிழ்ச்சியாக கிளம்பினர்
அஞ்சலி: ஸ்ரே... சி3 பாத்துட்டயாடி...
ஸ்ரேயா: பாத்தேன்டி... ஹப்பா என்ன சத்தம்.. காது பிஞ்சிடிச்சி..
அஞ்சலி: பின்ன... கொல பசில கத்துனாருல சூர்யா
இருவரும்: ஹா ஹா ஹா
மானசா: என்னங்கடி என்ன விட்டுனு வந்திட்டீங்க.. நா கொல பசில இருக்கேன்...
அஞ்சலி ஸ்ரேயா: ஹா ஹா ஹா...
மானசா: ஹே ஹே ஹே... உன் ஆளுடி...
அஞ்சலி: அட பைத்தியமே... எவன பாத்தாலும் என் ஆளா? நானே அவன முழுசா பாக்ல..
ஸ்ரேயா: இதோ வந்த்டான்.. பாத்துக்கோ...
அஞ்சலி: அதுலாம் பாக்க முடியாது. வா கெளம்பு கெளம்பு.. வா போலாம்
மானசா ஸ்ரேயா: ஹா ஹா ஹா ஹா
அஞ்சலி: இ இ இ இ இ .. பே
இளித்த வாயை சுருக்கி அழுகிறாள் அஞ்சலி....
நிகழ்காலம்
அஞ்சலி: கதிர்.... கதிர்... நீ என்ன பாக்காம இருந்துருந்த மகிழ்ச்சியா இருந்துருப்பள டா...
யாரோ அறையைத் திறந்து வருகிறார்கள்..
ஒருவன்: அடிங்க... ஒங்கதிர் தான் உன்ன கடத்திட்டு வந்ததே.. மூடிட்டு தின்னு.. செத்துகித்து தொலையாத
காதல்....காத்திரு....
பகுதி 6