காதல் காத்திரு பகுதி 6

அஞ்சலி கல்லூரியில்

அஞ்சலியின் தோழி மானசா : என்னடி.... பாய்பிரண்ட் அ பின்னாடி வச்சிட்டு ஊர் சுத்திட்டு வர போல...

அஞ்சலி: அழுக்கு மூஞ்சி.. எச்சி காரி துப்புறதுக்குள்ள ஓடிப்போயிடு

அஞ்சலியின் தோழி ஸ்ரேயா: ஹே... ஏன் இப்போ கோபப்பட்ற.. யாரு அவன்

அஞ்சலி: இல்லடி... அவன் யாருன்னே தெரில..

ஸ்ரேயா ஓ யாருன்னே தெரியாமத்தான் டபுள்ஸ் போனீங்களோ.. ஓகே ஓகே..

மானசா: மரண மாஸ்..செம்ம ஜோடி பொருத்தம்.. சித்தார்த்த விட இவன் சூப்பர் டி..

ஸ்ரேயா: ஹே லூசு

மானசா: ஐயோ..ஸாரிடி ஸாரிடி.. பூனக்குட்டி... கோபப்படாத

அஞ்சலி கோபத்துடன் நகர்ந்து விடுகிறாள்..

ஸ்ரேயா: அட காட்டுக் கொரங்கே.. எப்போ எத பேசணும்னே தெரில உனக்கு... இரு நா போயி சமாதான படுத்துறேன்...

கல்லூரியில் உள்ள திண்ணை ஒன்றில் அமர்ந்திருக்கிறாள் அஞ்சலி...

ஸ்ரேயா: புஜ்ஜிக்குட்டி...

அஞ்சலி: என்னடி

ஸ்ரேயா கோபமாடி செல்லம்

அஞ்சலி ஏன்..எதுக்கு கோபம்...

ஸ்ரேயா: ( மனதுக்குள் ஹப்பா மறந்துட்டா) வாடி எதாது சாப்டலாம்

அஞ்சலி: ( மனதுக்குள் மறக்க வேண்டியது இன்னும் நினைவிருக்கு.. ஆனா அத நினச்சி இப்போ என் சந்தோசத்த கெடுத்துக்க விரும்பல ) வா வா வா..... எனக்கும் பசிக்குது...

இருவரும் மகிழ்ச்சியாக கிளம்பினர்

அஞ்சலி: ஸ்ரே... சி3 பாத்துட்டயாடி...

ஸ்ரேயா: பாத்தேன்டி... ஹப்பா என்ன சத்தம்.. காது பிஞ்சிடிச்சி..

அஞ்சலி: பின்ன... கொல பசில கத்துனாருல சூர்யா

இருவரும்: ஹா ஹா ஹா

மானசா: என்னங்கடி என்ன விட்டுனு வந்திட்டீங்க.. நா கொல பசில இருக்கேன்...

அஞ்சலி ஸ்ரேயா: ஹா ஹா ஹா...

மானசா: ஹே ஹே ஹே... உன் ஆளுடி...

அஞ்சலி: அட பைத்தியமே... எவன பாத்தாலும் என் ஆளா? நானே அவன முழுசா பாக்ல..

ஸ்ரேயா: இதோ வந்த்டான்.. பாத்துக்கோ...

அஞ்சலி: அதுலாம் பாக்க முடியாது. வா கெளம்பு கெளம்பு.. வா போலாம்

மானசா ஸ்ரேயா: ஹா ஹா ஹா ஹா

அஞ்சலி: இ இ இ இ இ .. பே

இளித்த வாயை சுருக்கி அழுகிறாள் அஞ்சலி....

நிகழ்காலம்

அஞ்சலி: கதிர்.... கதிர்... நீ என்ன பாக்காம இருந்துருந்த மகிழ்ச்சியா இருந்துருப்பள டா...

யாரோ அறையைத் திறந்து வருகிறார்கள்..

ஒருவன்: அடிங்க... ஒங்கதிர் தான் உன்ன கடத்திட்டு வந்ததே.. மூடிட்டு தின்னு.. செத்துகித்து தொலையாத



காதல்....காத்திரு....

பகுதி 6

எழுதியவர் : உதயகுமார் (25-Feb-17, 2:47 pm)
சேர்த்தது : உதயகுமார்
பார்வை : 247

மேலே