பாவையின் பார்வை எண்சீர் விருத்தம்

எண்சீர் விருத்தம் :

செம்புனலாய் மெய்புகுந்து செருக்க கற்றும்
*****செந்தமிழின் தீஞ்சுவையில் விருத்தம் பாடும்
கம்பனவன் சிந்தனையும் களைத்து நிற்கும்
*****கவியமுதை மனமுருகும் கோலந் தன்னில்
அம்புலியின் குளிரெடுத்து அந்தி வான
*****அதரங்கள் அவிழாது நொடியில் வீழ்த்தும்
பம்மையெழில் கண்திறந்து பார்வை யாலே
*****பன்மொழிகள் பேசுகின்ற பாவை நீயே......

எழுதியவர் : இதயம் விஜய் (1-May-17, 8:39 am)
பார்வை : 130

மேலே