நினைக்கிறாயா

நினைக்கிறாயா..??
******
சந்தோஷம்
எனக்கான சந்தோஷம்
உனக்குள்ளே குவிந்து கிடக்கிறது.

திரையிட்டு வைத்திருக்கிறாயா...?
நினைக்கிறேன்
உன்னை நினைக்கிறேன்
எவ்வளவு அருந்தியும் தாகம் தீரவில்லை
உன் நினைவுகளை...

வேரோடு பிடிங்கி எறிந்துவிடு
என் உயிரை உனக்குலிருந்து
அப்போதும்,
உன்னை நான் சுமப்பேன்..

உன் மௌனத்தின் பக்கங்கள்தான்
என் வலியின் அடையாளங்களாய்
கருவாகிறது....

இறந்த பின் கதறி அழுவாயா
இருக்கும் போது,
என் அருகாமையை இழந்துவிட்டு....

மென்மையான கண்ணீரை
தனிமை சுமக்கிறது உன்னாலே
என் பொழுதுகளை
கடினமாக்கித்தருகிறாய் ஏன் ....?

நம் கடைசிப்பிரிவை நீ மறந்திருக்கலாம்
என் மார்பில் புதைந்த
உன் முகம், அந்த நொடி, உன் கண்ணீர்,
என்னை மரணம் வரை கொண்டுசெல்லும்....

மறந்திருப்பாய் என நம்பவில்லை,
மீண்டும்,
என் மடி மீது முகம் புதைப்பாய்
உன் வார்த்தைகள்
என்னோடு வாழும் வரைக்கும்...

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (5-Jun-17, 8:04 pm)
சேர்த்தது : ifanu
பார்வை : 289

மேலே