கோவப்பட்டு பார்க்கும் கொள்ளை அழகிற்கு
கொஞ்சம் கொஞ்சம் கவிதைகள்
மட்டுமே என்னால் எழுத முடியும் !
இப்படி கோவப்பட்டு பார்க்கும்
"கொள்ளை அழகிற்கு"
கவிதைகள் கொட்டி தீர்ப்பது என்பது
என்னால் இயலாத காரியம் தான் !
தயவு செய்து எங்கே இன்னொரு முறை
கோவப்படு !
சிரித்து விட்டாய் சிற்சில கவிதைகள்
போதுமானது !