எழுத்தில் நுழைய (Login to Eluthu)

மின் அஞ்சல் முகவரி
(Email)
கடவுச்சொல்
(Password)
 நினைவில் வை (Remember me)
Forget Password ?    கணக்கு தொடக்கம் ?
புல்லாங்குழல்     கவிஞர் இரா .இரவி - ஹைக்கூ கவிதை

புல்லாங்குழல் கவிஞர் இரா .இரவி 

புல்லாங்குழல் கவிஞர் இரா .இரவி

தீக்காயம் பட்ட போதும்
வருந்தவில்லை
புல்லாங்குழல்

காற்றை இசையாக்கும்
வித்தகக் கருவி
புல்லாங்குழல்

மவ்னமாகவே இருக்கும்
காற்றுத் தீண்டும் வரை
புல்லாங்குழல்

உருவில் சிறியது
உணர்வில் பெரியது
புல்லாங்குழல்

காட்டில் விளைந்து
காதோடு உறவாடும்
புல்லாங்குழல்

தீயால் துளைத்தபோதும்
இசை நல்கும்
புல்லாங்குழல்

இதழ் குவித்து விரல் பதித்து
காற்றுத் தந்ததும் இசைக்கும்
புல்லாங்குழல்

அன்று முதல் இன்று வரை
அற்புத இசை
புல்லாங்குழல்

எம்மொழியும் சம்மதம்
இனிய இசைப் பிறக்கும்
புல்லாங்குழல்

கானம் இசைத்து
கவலைப் போக்கும்
புல்லாங்குழல்

பல இசையிலும்
தனித்துக் கேட்கும்
புல்லாங்குழல்

விழிகள் மூடி செவிகள் திறந்தால்
தேன் பாயும்
புல்லாங்குழல்


மொத்த தேர்வு :

3

சராசரி தேர்வு :

3

x

email


எழுதியவர் :இரா .இரவி

நாள் :16-11-2011 08:26:30 PM
Added by :eraeravi
பார்வை :255


நண்பர்களும் பார்க்க

share with orkut Share

Get Code


1. கருத்து அளிக்க லாகின் (Login) செய்ய வேண்டும்.
2. ஆங்கிலம் மற்றும் எண்களை குறிப்பிட CTRL + G அழுத்தவும்.
உங்கள் கருத்து

புதிய கருத்துகள்
eraeravi17-November-11 7:58 AM

மிக்க நன்றி

அன்புடன் இரா ,இரவி


பதில் அளி

0 வாக்கு

  

sankaran ayya16-November-11 10:45 PM

குழல் இனிமை கவிதை இனிமை

---அன்புடன்,கவின் சாரலன்


பதில் அளி

0 வாக்கு

  




நண்பர்களின் கருத்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

புதிதாக இணைந்தவர்

இந்த மாதம் பரிசு பெற்றவர்

Random கவிதைகள்

கவிதைகள்

இதர படைப்புகள்

இதையும் பார்க்கலாம்

Live Cricket Scores

Top Contributors

Top Contributors of this Month

Join Us on follow me