எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

------- விளை நிலக்காட்சிகள்- 8 ------- விவசாய வேலைகளுக்கு...

-------விளை நிலக்காட்சிகள்-8
-------

விவசாய வேலைகளுக்கு இடையில் கிடைக்கும் நேரத்தில் விளை நிலங்களை சுற்றியுள்ள அழகை அவ்வப்போது படம் பிடித்து அதை நம் குழந்தைகளுக்கும், சூழ் நிலை காரணமாக நகரில் பணியில் இருப்பவர்களுக்கும் கொஞ்சம் மன அமைதி தர  பதிவு செய்து வரும் படங்களின் தொகுப்பு இது

படம் 1
மறைந்து நின்று முறைக்கும் காட்டுப் பூனை.

படம் 2
பாம்பு ஒன்றை கொத்திக் கொண்டிருக்கும் ஆண் மயில்.

பெண் மயில்கள் வைக்கும் முட்டைகளை பாம்புகள் சுவைக்க வரும் போது  அடையிலிருக்கும் பெண் மயில் கொடுக்கும் சிறு சத்தத்துக்கு விர்ரென வந்து தாக்கி பாம்புகளை கொல்லும்.

படம் 3
தானியத்தை கொத்தியபடி சுற்றித் திரியும் பெண் மயில்கள்.

படம் 4
எப்போது தண்ணீர் விடுவீர்கள் என்று கேட்பது போல் காத்திருக்கும் நாரை கூட்டம். இவை வந்தாலே இரண்டு நிமிடம் தண்ணீர் விட்டே ஆகவேண்டும். தினம் தினம் பகல் ஒரு மணிக்கு மேல் இந்த தொட்டிக்கு வந்து குரல் கொடுக்கும் இந்த செல்ல நாரைகள் மோட்டரில் வாய் வைத்து தண்ணீரைக் குடித்தும் தண்ணீரில் குளித்தும் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே விளையாடும். பிறகு அவற்றின் ஒலியில்  நன்றி சொல்லிவிட்டு பறந்துவிடும்.

இந்த ஒரு குடும்பம் மட்டுமே மோட்டர் தொட்டிப் பக்கம் வருகிறது. இவை வரும் போதெல்லாம் ஒரே குழப்பம். இவை மட்டும்  எதற்காக சரியாக அந்த மதிய நேரத்தில் மட்டும் வந்து குளிக்கின்றன ? அப்படி குளித்து விட்டு எங்கே போகின்றன, அப்படி குளித்துவிட்டால் மீண்டும் இவை வயல் வெளியில் கசகசக்கும் சேற்றில் இறங்காதா என குழம்பிப் போகிறேன்.( இதை கண்டுபிடிக்காமல் விடப் போவதில்லை)

நாள் : 25-Jan-16, 11:43 pm

மேலே