என் வீட்டுத் தோட்டத்தில்

என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லம் கேட்டுப்பார்

என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்

என் வீட்டுத் தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப்பார்

உன் பேரைச் சொல்லுமே



உன் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லம் கேட்டுப்பார்

உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்

உன் வீட்டுத் தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார்

என் நெஞ்சைச் சொல்லுமே



வாய்ப் பாட்டுப் பாடும் பெண்ணே மௌளனங்கள் கூடாது

வாய்ப் பூட்டுச் சட்டம் எல்லாம் பெண்ணுக்கு ஆகாது

வண்டெல்லாம் சத்தம் போட்டால் பூஞ்சோலை தாங்காது

மொட்டுக்கள் சத்தம் போட்டால் வண்டுக்கே கேட்காது

ஆடிக்குப் பின்னாலே காவேரி தாங்காது

ஆளான பின்னாலே அல்லிப்பூ மூடாது

ஆசை துடிக்கின்றதே

(என் வீட்டுத்)



சொல்லுக்கும் தெரியாமல் சொல்லத்தான் வந்தேனே

சொல்லுக்குள் அர்த்தம் போலே சொல்லாமல் நின்றேனே

சொல்லுக்கும் அர்த்ததுக்கும் தூரங்கள் கிடையாது

சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது

எண்ணிக்கை தீர்ந்தாலும் முத்தங்கள் தீராது

எண்ணிக்கை பார்த்தாலே முத்தங்கள் ஆகாது

ம்ம்ம்…அனுபவமோ


கவிஞர் : வைரமுத்து(3-Jan-13, 3:30 pm)
பார்வை : 0


மேலே