மெசியாவின் காயங்கள் - நீர்துளிகள்

தெரிந்தோ தெரியாமலோ
உன் காலடி மண்ணெடுத்து
ஒரு பூமி செய்துவிட்டேன்

உன் ஈரக் கூந்தலை
கடலாகச் செய்யும் முன்னே
கடந்து போய்விட்டாய்

உயரத்திலிருந்து சூரியனாய்
வருத்துகிறது ஒற்றைப் பார்வை
வெப்பத்தில் வறள்கிறது
எனது சின்னஞ்சிறிய பூமி
நீருற்று தேடிக் கிணறுகள் தோண்டினால்
பீறீட்டடிக்கிறது ரத்தம்.

கண்ணே
இரண்டொரு தீர்த்தமணிகளைத்
தானமிடு.


கவிஞர் : ஜெ. பிரான்சிஸ் கிருபா(8-May-11, 9:19 am)
பார்வை : 70


பிரபல கவிஞர்கள்

மேலே