நிலவில் வானவில்!

நீ சிரித்துக் கொண்டிருக்கிறாயா?
என் வீட்டுச் செடிகள் பூத்துக் கொண்டிருக்கிறது !
நீ அண்ணாந்து பார்த்திருப்பாய் ஆகாயத்தில் வானவில் !
உன் பெயரை எழுதுகிறேன்; நான் எவ்வளவு பெரிய கவிஞன் !
பறிக்கத் துடிக்கிறது கைகள் உன் புடவையெங்கும் பூக்கள் !
என் இருதயத்தில் ரத்தக் கசிவு என்று மருத்துவத் தகவல் என்றாவது நீ அழுதிருப்பாயோ !
இரவு வருகிறதோ இல்லையோ கனவு வருகிறது !
கனவு வருகிறதோ இல்லையோ இமைகளை மூடினால் நீ வருகிறாய் !


கவிஞர் : பா.விஜய்(29-Feb-12, 3:50 pm)
பார்வை : 83


மேலே