கிண்ணங்களில் பூக்களாக
மழையில் நனைய வேண்டும்
துன்பத்தில் திளைத்திட வேண்டும்!
ஒவ்வொரு துளியையும்
பன்னீராக நினைத்திட வேண்டும் !
குளிருடன் குளிரும்
பனியுடன் பனியும் வாழ வேண்டும்!
மழையும் மழையும்
வெயிலும் வெயிலும் வாழ வேண்டும்!
எல்லாவற்றையும் பலா சுவை போல
ஆனந்தம் கொள்ளவேண்டும்!
வந்த துன்பத்தையும்
வாராத துன்பத்தையும்!
உணவில்லாத போதும்
கிண்ணங்களில் பூக்களை
அடுக்கி வைத்து மகிழ வேண்டும்!