முயற்சி முயற்சி முயற்சி
முயற்சி முயற்சி முயற்சி
அதுதான் உந்தன் பெயரோ-
சுருண்டு உருண்டு வரும்
கடல் அலையே!
எதைத் தேடி கரைக்கு ஓடி வருகின்றாய் -பின்
எதை மறந்து நீண்டும் கடலுக்குள் ஓடுகின்றாய்?
எதை எடுப்பதெற்கென்று மீண்டும் ஓடி வருகின்றாய்?
எதை எடுத்து விட்டு திரும்பவும் ஆழ் கடலுக்குள்
ஓடுகின்றாய்
உன்னிடம் இல்லாத வளம் என்ன?
அதன் பின்னும் ஏன் இந்த அயராத உழைப்பு!
அலுக்காத முயற்சி.
உன் முயற்சியில் அடங்குவது எம் வாழ்க்கை!
’என்னடா வாழ்க்கை இது’ என அலுத்துப்
போன எனக்கு பாடம் சொல்வதற்கா
இந்த ஓட்டமும் நடையும் உனக்கு?
கடலலையே நன்றி நன்றி உனக்கு!.