வேதனை

இவன் கனவு
என்று பலிதமாகும்
அரதப் பழசானாலும்
அந்த வேட்டியை
உடுத்தினால் தான்
ஜம்பம் இவனுக்கு
வீசப்பட்ட அம்புகளல்ல
வார்த்தைகள்
கூர் முனையில்
விஷம் தடவப்பட்டவை
ஆடைக்குத் தான் மதிப்பு
ஆளுக்கு மதிப்பில்லை
உள்ளத்தில் நல்ல உள்ளம்
உதாசீனப்படுத்தப்படுவதனால் தானே
அழகை மட்டும் ஆராதிப்பவர்
பெருகிவிட்டதால் தானே
சித்தார்த்தனின் சித்தாந்தப்படி
இவ்வுலகம் மாயாலோகம் தானே
சத்தியம்
சபிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையின்
சாபக்கேடு தானே
சற்று பொறுங்கள்
எப்பயோ தயாராகிவிட்டது
எனக்கான சிலுவை.



ப.மதியழகன் என்ற பெயர் இணைய இதழ்களிலும் இலக்கிய இதழ்களிலும் வெகுவாகப் பேசப்பட்டது இந்த சதுரங்கம் கவிதை தொகுப்பு வெளிவந்த பின்பு தான்.இந்த சதுரங்கம் கவிதை தொகுப்பின் விமர்சனம் தாமரை ஜனவரி இதழில் வெளிவந்துள்ளது.தாமரை இதழை வாங்குவதற்கு 9884715642 இந்த கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.எனது கவிதை தொகுப்பை வாங்க விரும்புவோர் சென்னை புத்தக கண்காட்சி ஸ்டால் எண் 498,499 கீதம் பப்ளிகேஷன் என்ற அரங்கில் கிடைக்கும்.

எழுதியவர் : ப.மதியழகன் (10-Jan-13, 3:23 pm)
சேர்த்தது : ப.மதியழகன்
பார்வை : 133

மேலே