நீரில் இருந்து அறிந்து கொள்வீர்

மலையில் பிளவுகளிலும் வெடிப்புகளிலும் மோதுண்டு
மிகுந்த இரைச்சலுடன் புரண்டோடும் சிற்றோடைகள் உண்டு.
ஆனால் மாபெரும் நதிகளோ அமைதியாகவே தவழ்ந்து செல்லும்.

வெறுமைக் கலமே ஒலி செய்யும்,
நிறை குடம் தளும்பாது.
அறவிலி அரை நிறை குடம்
அறிஞனோ ஆழமான அமைதியான குளம்.

எழுதியவர் : கவிஞர் இனியவன் (15-Jan-13, 12:06 pm)
பார்வை : 97

மேலே